Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தடுப்பூசி போடாதவர்களுக்கே கொரோனா 3வது அலையில் மரணம்.. தடுப்பூசி போட்டுக்கங்க - மா.சுப்பிரமணியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பதாகவும், தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு பின் விளைவுகள் ஏற்பட்டு உள்ளது என்று இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றும் பொதுமக்கள் அனைவரும் தைரியமாக தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Recommended Video

    Omicrons 20 Symptoms Revealed! How Long They Last | OneIndia Tamil

    கொரோனா பரவலின் 3வது அலை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பரவலை குறைக்கும் நடவடிக்கைக்கு தடுப்பூசி முக்கிய காரணியாக இருக்கும் என நிபுணர்கள் கூறியுள்னர்.

    இதையடுத்து தமிழகத்தில் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு முகாம்களை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை மேற்கொண்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    மெகா தடுப்பூசி முகாம்

    மெகா தடுப்பூசி முகாம்

    இதையடுத்து தமிழகம் முழுவதும் சனிக்கிழமைகளில் வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார். கடந்த 8ஆம் தேதி பதினெட்டாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்ற பொங்கல் பண்டிகை காரணமாக கடந்த வாரம் தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் இடங்களில் 19வது தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தடுப்பூசிக்கு முன்னுரிமை

    தடுப்பூசிக்கு முன்னுரிமை

    இதில் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் முன்களப் பணியாளர்கள் மற்றும் இரண்டாவது டோஸ் போடுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறப்பு முகாம் குறித்து ஆய்வு நடத்திய தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளது என்று இதுவரை எந்த புகாரும் வரவில்லை எனவும், பொதுமக்கள் அனைவரும் தைரியமாக தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

    கொரோனா தடுப்பூசி

    கொரோனா தடுப்பூசி

    சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்ட பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் 94.19 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 74.11 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டார். 21 மாநகராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றுள்ளது. 2,580 ஊராட்சிகளில் 100 சதவீதம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.சென்னையில் 38,850 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனக் கூறினார்.

    பக்க விளைவுகள் இல்லை

    பக்க விளைவுகள் இல்லை

    தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் 3வது அலையில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பதாக கூறிய அமைச்சர், 1,71,616 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும், தமிழகம் முழுவதும் முதல் தவணை தடுப்பூசி 89 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசி 65 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர் எனக் கூறிய அமைச்சர் மா சுப்பிரமணியன், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது இன்று பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளலாம் எனவும், தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளது என்று இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்பதால், பொதுமக்கள் அனைவரும் தைரியமாக தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+