பணம் வாங்காம நேர்மையா செலக்ட் பண்ணுங்க சார்.. ட்வீட் செய்தவருக்கு மா.சுப்பிரமணியன் உடனடி ரிப்ளை!
சென்னை: சுகாதார ஆய்வாளர் கிரேடு 2 பணியிடங்களுக்கான 1066 காலி இடங்களை நிரப்ப பணம் பெற்றுக்கொண்டு போஸ்டிங் போடுவதாக ஒருவர் ட்விட்டரில் ஆதங்கம் தெரிவித்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியனே நேரடியாக அவரது ட்வீட்டுக்கு ரிப்ளை செய்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவ பணிகளில் அடங்கிய சுகாதார ஆய்வாளர் கிரேடு 2 பணியிடங்களுக்கான 1066 காலி இடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ( MRB) வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் சேர விரும்புபவர்கள் 12ஆம் வகுப்பில் உயிரியல் பிரிவில் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவில் பயின்றவர்களாக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்தவர்களாக இருக்க வேண்டும். மல்டி பர்ப்பஸ் ஹெல்த் ஒர்க்கர் / ஹெல்த் இன்ஸ்பெக்டர் / சானிட்டரி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஏதோ ஒரு பாடத்தை பயின்று, டைரக்டர் ஆப் பப்ளிக் ஹெல்த் அண்ட் பிரிவென்டிவ் மெடிசின் ஆணையத்தில் சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். SC, ST, SCA, MBC / DNC உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் உட்சபட்ச வயது வரம்பு இல்லை. 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் அப்ளை செய்யலாம். அதே போல் OC வகுப்பை சேர்ந்தவர்களில் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். OC பிரிவில் மாற்றுத்திறனாளிகளாக இருப்பவர்கள் 42 வயது வரையும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

இந்த சுகாதார ஆய்வாளர் கிரேடு 2 பதவிக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி தகுதி பட்டியல் தயாரிக்கப்படும். பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%- க்கும், சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%- க்கும் கணக்கிடப்படும்.
இந்த அறிவிப்பு சான்றிதழ் படிப்புகளை முடித்த தகுதி வாய்ந்த தேர்வர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தப் பணியிடங்களை நிரப்ப பணம் பெற்றுக்கொண்டு ஆட்சேர்க்கை நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இதுதொடர்பாக ட்விட்டரில் ஒருவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு, "சார் நான் ஹெல்த் இன்ஸ்பெக்டர் கோர்ஸ் முடித்துவிட்டு 4 ஆண்டுகளாக வேலை இன்றி இருக்கிறேன். இப்போது சுகாதார ஆய்வாளர் கிரேடு 2 பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், பணம் கட்டினால் தான் வேலை கிடைக்கும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். நான் என்ன செய்வது? எங்களிடம் காசு இல்லை. நேர்மையான முறையில் தேர்வு செய்யுங்கள். ப்ளீஸ்" என பதிவிட்டிருந்தார்.
இந்த ட்வீட்டிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அவரது ரிப்ளையில், "வணக்கம்! நான் மா.சுப்பிரமணியன். MRB-யின் மூலம் நேற்று முன் தினம் தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முறையாக தேர்வு நடத்தப்பட்டு தகுதியுள்ளோர் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் எங்கும் யாராலும் மாற்று வழிகள் மூலம் தவறிழைக்கவே முடியாது. நீங்கள் ஐயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. தேர்வெழுதி வெற்றி பெற முயற்சியுங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
-
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்?












Click it and Unblock the Notifications