மருத்துவ நிபுணர் எடப்பாடி புதிய சிகிச்சை முறையை கண்டுபிடிச்சு சொல்வாரு.. அமைச்சர் மா.சு கிண்டல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருத்துவ நிபுணர் எடப்பாடி பழனிசாமி வேறு ஏதாவது புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்து சொன்னால் பின்பற்றலாம் என்று கிண்டல் செய்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக திமுக அரசு எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

ma subramanian edappadi palanisamy kallakurichi liquor death

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களைக் காப்பாற்றத் தேவையான மருந்து இல்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி Omeprazole என முன்பு குறிப்பிட்ட நிலையில், இன்று Fomepizole மருந்து பெயரைக் கூறிய நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் அந்த மருந்துகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "Omeprazole - Fomepizole குழப்பத்தில் எடப்பாடி! 20.06.2024 அன்று Omeprazole மருந்து இல்லை என்று கூறிய எடப்பாடிக்கு 4.42 கோடி Omeprazole மருந்து கையிருப்பு உள்ளது என்று பதில் அளித்தேன். பிறகு இன்று (22.06.2024) Fomepizole மருந்து கையிருப்பில் இல்லை என்று குழப்புகிறார் மருத்துவ நிபுணர் எடப்பாடி, Fomepizole injection தேவைக்கு அதிகமாகவே கையிருப்பில் உள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகத்தரமான மருத்துவ நெறிமுறைகள் (Treatment Protocol) மூக்கு வழி பிராண வாயு செலுத்துதல், நரம்பு வழி Drips, எத்தனால் ஊசி, லியுகோவோரின் ஊசி, சோடா பை கார்பனேட் ஊசி, ஹிமோடையாலிசிஸ், பேன்டோபிரசோல் ஊசி, செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) பின்பற்றி சிகிச்சை வழங்கப்படுகிறது.

ma subramanian edappadi palanisamy kallakurichi liquor death

மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அளிக்கப்படும் அதே சிகிச்சை முறை கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் ஆகிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மருத்துவ நிபுணர் எடப்பாடி பழனிசாமி வேறு ஏதாவது புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்து சொன்னாலும் அது சரியானவையாக இருந்தால் அதனால் உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற நிலை இருப்பின் எடப்பாடி சிகிச்சை முறைகள் பின்பற்றப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.

அதோடு, எடப்பாடி பழனிசாமி முன்பு மருந்து பெயரை குறிப்பிட்டு பேசியதையும், இன்று வேறொரு மருந்து பெயரை குறிப்பிட்டு பேசிய வீடியோவையும் இணைத்து பதிவிட்டுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+