தமிழகத்தில் புதிய சிறுதானிய சிறப்பு மண்டலம்! துவரை சாகுபடி குறித்தும் முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சிறுதானியங்கள் குறித்துப் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இன்றைய தினம் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். திருக்குறள் உள்ளிட்ட பண்டை தமிழ் இலக்கியங்கள் குறித்து மேற்கோள் காட்டி அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது வேளாண் பட்ஜெட்டை தொடங்கினார்.

கடந்த ஆண்டு வேளாண் பட்ஜெட் தவழும் குழந்தையாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், இந்த அந்த ஆண்டு வேளாண் பட்ஜெட் நடந்து செல்லும் குழந்தையாக இருக்கிறது என்றும் அடுத்த ஆண்டுகளில் வேளாண் பட்ஜெட் ஓடும் குழந்தையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 86 திட்டங்களில் 80 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2023ம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சிறுதானிய திருவிழா நடத்தப்படும் என்றும் 19 மாவட்டங்களில் சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும் என்றும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
Recommended Video
முதலமைச்சர் தலைமையில் சிறுதானிய திருவிழா தொடர்ந்து நடத்தப்படும் என்றும் சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications