காந்தி மண்டபத்தை சுத்தம் பண்ணலயா? ஆளுநர் ரவிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!
சென்னை: காந்தி மண்டபம் முறையாக பராமரிக்கப்படவில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறும் குற்றச்சாட்டு தவறானது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். காந்தி மண்டபம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தினமும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை சேவை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டார்.

காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலையை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்த ஆளுநர்ஆர்.என்.ரவி, வளாகத்தில் ஆங்காங்கே கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மகாத்மா காந்தி தூய்மையையும் வலியுறுத்தியவர். தூய்மை என்பது தெய்வீகமானது. அதனை தினசரி பழக்கமாக நாம் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். நம் நாட்டில் பொது இடங்களில் குப்பை கொட்டும்போக்கு உள்ளது. இது நாகரீக சமுதாயத்துக்கு நல்லதல்ல. பொது இடங்களில் தூய்மையின்மை என்பதுபல நோய்களை உருவாக்கும். இதனால் பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள் தான்.
காந்தி மண்டபத்தில் கூட குப்பை குவிந்து கிடக்கிறது. குறிப்பாக ஆங்காங்கே மதுபாட்டிகள் போன்றவையும் கிடக்கின்றன. இது மகாத்மா காந்தியின் கொள்கைக்கு எதிரானது. இதை பார்க்குபோது மிகவும் வருத்தமாக உள்ளது. எனவே பொது இடங்களில் குப்பை கொட்டக்கூடாது. அது அனைவருக்குமானது." எனத் தெரிவித்திருந்தார்.
காந்தி மண்டபத்தில் குப்பைகள் கிடப்பதாகவும், காந்தி மண்டபம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் ஆளுநர் ரவி வைத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆளுநரின் குற்றச்சாட்டு தவறானது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
காந்தி மண்டபம் முறையாக பராமரிக்கப்படவில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறும் குற்றச்சாட்டு தவறானது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, காந்தி மண்டபம், கடற்கரை சாலைகளில் உள்ள முக்கிய இடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தினமும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications