இனி வரும் காலங்களில் சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்காது.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
சென்னை: இனி வரும் காலங்களில் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்காத வகையில் திட்டம் வகுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை உறுதித்தன்மையாக உள்ளதா என அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை 2.0 திட்டத்தின்படி சென்னையில் உள்ள நீர் தேங்க கூடிய பாலங்களை சீரமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட உள்ளது.
கடந்த ஆட்சியாளர்கள் ஆயிரக்கணக்கான கோடிக்கு திட்டங்களை தீட்டி சென்னை, வடிகால் அமைப்பினை சீரழித்து சென்றுள்ளனர். அதனை சரி செய்வதற்கு சிறிது காலம் தேவைப்படுகிறது. அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களுக்கு மற்றும் வடிகால் அமைப்பை உருவாக்க வேண்டும்.
ஆனால், வடிகால் அமைப்பு எங்கு போய் சேர வேண்டும் என்று வடிவமைக்கவில்லை. தவறாக உள்ள வடிகால் இணைப்புகள் மாநகராட்சி ஆணையர் சார்பில் கணக்கெடுப்பு நடைபெற்றும் வருகிறது. இனிவரும் காலங்களில் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்காத வகையில் திட்டம் வகுக்கப்படும்.
நிதிச்சுமை இருந்தாலும் சென்னையை ஒளிரச் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். மக்களை காப்பாற்றும் பணியில் நிச்சயம் ஈடுபடுவோம் என அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து இருக்கிறது விரைவில் அப்பகுதியில் வெள்ளநீர் அகற்றப்படும். அப்பகுதியிலுள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் 1,600 தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. பொதுமக்களில் யார் கோவிஷீல்டு முதல் தடுப்பூசி எடுத்து இருக்கிறார்களோ அவர்கள் 80 நாள் கழித்தும், கோவாக்சின் முதல் தடுப்பூசி போட்டவர்கள் 30 நாள் கழித்தும் 2ம் தவணை தடுப்பூசியைப் போட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
முதலாவது டோஸ் தடுப்பு ஊசி போடப்பட்டவர்கள் உரிய காலத்திற்குள் 2வது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது கூடியவர்கள் வாக்காளர் பட்டியல் முகாம் நடைபெற இருக்கிறது அவர்களது ஆதார் கார்டு கொடுத்து வாக்காளர் தங்களை வாக்காளர்களாக இணைத்துக்கொள்ளலாம் என ககன்தீப் சிங்பேடி தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications