ஸ்காட்லாந்து அப்பறம் லண்டன்.! அதிகாரிகளுடன் பறக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி! என்ன காரணம் தெரியுமா?
சென்னை: 5 நாள் அரசு முறை பயணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்காட்லாந்து, லண்டன் ஆகிய நாடுகளுக்கு கடலில் காற்றாலை மூலம் மின்னுற்பத்தி செய்யும் சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்ய வெளிநாடு பயணம் மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கும் முன்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய்க்கு அரசுமுறைப் பயணம் செய்து பல்வேறு முதலீடுகளை ஈர்க்கப்பட்டது.
இதையடுத்து சுமார் 25 நாட்கள் அமெரிக்கா கனடா சிங்கப்பூர் ஆஸ்திரேலியா இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சுமார் பத்தாயிரம் கோடி அளவில் முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து தற்போது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளி நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

மின்னகத்தில் ஆய்வு
கடந்த ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி முதலமைச்சர் மின்னகம் நுகர்வோர் சேவையை தொடங்கி வைக்கப்பட்டது. மின்னகம் நுகர்வோர் சேவை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் அமைந்துள்ள மின்னகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி," தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன . 9.11 லட்சம் புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஒரு லட்சம் அழைப்புகள் வந்தாலும், அதை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

உடனடி தீர்வு
சமூக வலைத்தளங்களின் மூலம் வரும் புகார்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஒரு லட்சம் புகார்கள் வந்தாலும் அதை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வட சென்னை அனல் மின் நிலையம் மூன்றாம் நிலை பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

வெளிநாட்டு அரசு முறை பயணம்
தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஸ்காட்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு 5 பேர் கொண்ட குழுவாக கடலில் காற்றாலை தயாரிக்கும் பணி தொடர்பாக இன்று வெளிநாடு செல்கிறோம்" என அவர் கூறினார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு அரசு முறை பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications