சரியான இடத்தில் சரியான அமைச்சர்.. இரவிலும் கடமை தவறாத வன்னியரசு.. குவியும் பாராட்டு
சென்னை: தவெக ஆட்சி பொறுப்பே ஏற்று ஒரு மாதம் கடந்துவிட்டது. பல்வேறு துறைகளில் அமைச்சர்கள் ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். அரை நூற்றாண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியை உடைத்து தவெக கூட்டணி அமைச்சரவை ஆட்சியில் உள்ளது. சமூகநீதித்துறை அமைச்சர் இரவு 9 மணியானாலும் தலைமை செயலகத்தில் மக்களை சந்தித்து செல்கிறாராம். அவரின் அணுகுமுறையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை அடியோடு மாற்றியுள்ளது. எதிரும் புதிருமாக இருந்த திமுக, அதிமுக 2 கட்சிகளும் தவெகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளன. அடுத்தடுத்து தேர்தல் தோல்விகளால் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து வருகிறார்கள். திமுக எதிர்க்கட்சியாகியுள்ள நிலையில், அதன் கூட்டணி உடைந்துவிட்டது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன.

வன்னியரசின் செயல்பாடு
மதிமுக, கம்யூனிஸ்ட்கள் ஆகியோரும் தவெக ஆதரவு நிலையில் உள்ளனர். நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்ற தவெக கூறிய நிலையில், நேற்று தமிழக அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. தேர்தலிலேயே தவெக ஜாதிய அரசியலை உடைத்தது என்று பாராட்டுகள் குவிந்தன. தவெக அமைச்சரவையில் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு சமூகநீதித்துறை அமைச்சராக உள்ளார்.
சமூகநீதித்துறை அமைச்சராக பதவியேற்றதில் இருந்து வன்னியரசு பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்து மக்களின் கருத்துகளை கேட்டு வருகிறார். கோவையில் ஆய்வுபோது ஆதிக்க ஜாதி மக்களால் பட்டியலின மக்கள் கிராமத்துக்கு பேருந்து வருவது தடை செய்யப்படுவது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. அவரிடம் சொன்ன சில நாட்களிலேயே அந்த கிராமத்திற்கு பேருந்து இயக்கப்பட்டது. சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அவரின் செயல்பாடுகள் இருக்கின்றன. தலைமை செயலகத்திலும் அதை உணர முடிகிறது.
இரவிலும் தவறாத கடமை
தலைமை செயலகத்தில் வன்னியரசு இரவு வரை இருக்கிறார். இரவு 9 மணிக்கு மேலாகவும் அவரின் அறை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. எந்த மனுவையும் வன்னியரசு தன்னுடைய இருக்கையில் அமர்ந்து கூட வாங்குவதில்லை. மணிக்கணக்காக நின்றபடியே அத்தனை மனுக்களையும் வாங்கி படிக்கிறார். அதில் எந்த அவசரமும் இல்லாமல் பொறுமையாக கோரிக்கைகளை கேட்டு மக்களை கண்ணியத்தோடு நடத்தி மனநிறைவோடு அனுப்பி வைக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக நடவடிக்கையும் துரிதமாக எடுக்கப்படுகிறதாம். இதனால் அவரை சந்திக்கும் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications