சேட்டை கூடாது..சின்னம் பறிப்பு- அயோத்தி ராமர் கோவிலில் சத்தியம் செய்யலாமா? அண்ணாமலைக்கு சீமான் சவால்
சென்னை: தேர்தல் சின்னம் பறிக்கப்பட்டது தொடர்பாக ராமர் கோவிலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தம்முடன் சேர்ந்து சத்தியம் செய்ய தயாராக இருக்கிறாரா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது இந்திரா காந்தி அம்மையார். அப்போது ஆட்சியில் இருந்த திமுக, ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள் என அஞ்சி சரணடைந்துவிட்டது. எங்களுடைய தாத்தா மூக்கையாத்தேவர் மட்டும்தான் எதிர்த்து குரல் கொடுத்தார்.

நாட்டை ஆளும் பிரதமரே கச்சத்தீவு பற்றி 'அண்ணாமலை' தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தரவுகளை வைத்து பேசுகிறார் என்பது எப்படி சரியாகும்? அப்படியானால் நீங்க எந்த லட்சணத்தில் எங்களை ஆட்சி செய்திருக்கிறீர்கள்? இதை ஒவ்வொரு குடிமகனும் கேட்கனுமா இல்லையா? இன்னும் எத்தனை நாளைக்கு டோல்கேட் வசூல் என தகவல் கேட்டேன் கொடுத்தீங்களா? குஜராத் கலவரத்தில உண்மையிலேயே என்ன நடந்ததுன்னு கேட்கிறேன் தகவல் தருவீங்களா? மணிப்பூரில் உண்மையிலேயே கலவரத்துக்கு காரணம் என்ன? எத்தனை பேர் செத்து போனாங்க.. சொல்வீங்களா?
இப்பவும் ஒன்றும் ஆகலை.. கச்சத்தீவை மீட்டு கொண்டு வந்துவிடுங்கள்.. ஏப்ரல் 19-ந் தேதிக்குள் அதை செய்துவிடுங்கள்.. உங்களுக்கே நாங்கள் ஓட்டையும் போட்டுவிடுகிறோம்.
கரும்பு விவசாயி சின்னம் விவகாரத்தில் அண்ணாமலையை வரச் சொல்லுங்க.. அண்ணாமலை ஜெய் ஸ்ரீராம் என சொல்லுகிற ராம பக்தன்தானே.. நாம இரண்டு பேரும் ராமர் கோவிலுக்குப் போவோம்.. நீதான் என் சின்னத்தை பறிச்ச ஆளுன்னு நான் சத்தியம் செய்றேன். அதே ராமர் மேல எனக்கும் கரும்பு விவசாயி சின்னத்தை பறிச்சத்துக்கும் தொடர்பே இல்லைன்னு சத்தியம் செய்.. நான் கட்சியையே கலைச்சுருவேன்.. வா..ரெண்டு போரும் அயோத்திக்கு போவோமா? ராமரைத்தான் நீ பிக் கடவுள்னு நம்பிகிட்டு இருக்க.. வா போவோம்.. இந்த சேட்டை எல்லாம் வெச்சுக்கக் கூடாது.. 5 வயசில் இருந்து அரசியல் பண்றவன் நான்.. சிவகங்கை கலெக்டர் ஆபிசுக்கு 5 வயசில் கம்யூனிஸ்டு கொடி பிடிச்சுகிட்டுப் போனவன் நான்.. என் கிட்ட இப்படி எல்லாம் பேசக் கூடாது. இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications