"இந்த ஊரே எங்களுக்கு வேணாம்டா”.. ஈக்கள் தொல்லையால் அலறும் திருச்செங்கோடு பகுதி கிராம மக்கள்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கட்டிப்பாளையம் கிராமத்தில் ஈக்கள் பிரச்சனையால் அங்குள்ள மக்கள் குடியிருப்புகளை காலி செய்து விட்டு வேறு இடத்துக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, கட்டிப்பாளையத்தில் 20க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. கோழிப்பண்ணைகளால், அப்பகுதி முழுவதும் ஈ தொல்லை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கோழிப் பண்ணைகளில் கோழிக் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் அதில் உற்பத்தி ஆகும் ஈக்கள், அப்பகுதியில் பரவியுள்ளன.

ஈக்கள் கட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து கொள்கின்றன. குறிப்பாக, குடியிருப்புகளில் உள்ள உணவுப் பொருட்களின் மீது அவை சூழ்ந்து காணப்படுகின்றன. இதனால், பல்வேறு தொற்று நோய் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரும் உள்ளாவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஈக்கள் தொல்லையால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குடியிருப்புகளை காலி செய்து செல்லும் அளவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஈக்களை கட்டுப்படுத்த, கோழிப்பண்ணைகளில் அதற்குரிய மருந்து தெளிக்க வேண்டும் என, நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், "திருச்செங்கோடு தாலுகா, மரப்பரை கிராமம் அடுத்த கட்டிபாளையம் பகுதியில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்கள் ஊரை சுற்றிலும், 20க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. அதனால் ஊர் முழுவதும் ஈக்கள் அதிகரித்து, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
தண்ணீர் மற்றும் உணவு பொருட்களில் மொய்க்கும் ஈக்களால் குழந்தைகள், முதியவர்கள் எளிதில் நோய்வாய்ப்படுகின்றனர். எனவே, ஈக்கள் வராமல் தடுக்கும் வகையில். கோழிப்பண்ணைகளிலும், அனைத்து வீடுகளுக்கும் மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications