விண்வெளியில் மணமணத்த மீன் குழம்பு.. சர்வதேச ஸ்பேஸ் சென்டரில் சுனிதா வில்லியம்ஸ் செய்த தரமான சம்பவம்
சென்னை: சர்வதேச விண்வெளி மையத்துக்கு 3வது முறையாக வெற்றிக்கரமாக சென்றுள்ள இந்திய வம்சவாளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் எடுத்து சென்ற மீன்குழம்பு பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுனிதா வில்லியம்ஸ். இவர் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் போயிங் ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் கடந்த 5ம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்டது. இந்த விண்கலன் பூமிக்கு மேல் விண்வெளியில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி பயணத்தை தொடங்கியது.
27 மணிநேர பயணத்துக்கு பிறகு ஜூன் 6 இரவு 11 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தை அவர் அடைந்தார். விண்வெளிக்கு சென்றதும் சுனிதா வில்லியம்ஸ் உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையில் நடனமாடினார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள 7 வீரர்கள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர்.
விண்வெளிக்கு சுனிதா வில்லியம்ஸ் செல்வது இது 3வது முறையாகும். இங்கு அவர்கள் 8 நாட்கள் தங்கி ஆய்வு செய்ய உள்ளனர். அதன்பிறகு அவர்கள் ஆய்வை முடித்து மீண்டும் பூமிக்கு திரும்பி வர உள்ளனர். இந்த பயணத்தின்போது சுனிதா வில்லியம்ஸ் தன்னுடன் மீன்குழம்பு எடுத்து சென்றார். சுனிதா வில்லியம்ஸ் ஒவ்வொரு முறை விண்வெளி பயணம் செய்யும்போது சில பொருட்களை விண்வெளிக்கு எடுத்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதற்கு முன்பு அவர் பகவத் கீதை, சமோசா எடுத்து சென்றிருந்தார். அந்த வரிசையில் தற்போது அவர் மீன்குழம்பு மற்றும் விநாயகர் சிலையை எடுத்து சென்றார். இந்த நிலையில் தான் மீன்குழம்பை தன்னுடன் எடுத்து சென்றிருப்பது பற்றி அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அருகே மீன் குழம்பு இருப்பது வீட்டில் இருப்பது போன்று உணர்வதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications