நீட் தேர்வு... மையங்கள் ரெடி.. ஆடை முதல் ஆவணம் வரை.. மாணவர்களே முழு விவரம் இதோ!!
சென்னை: மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாளை நாடு முழுவதும் நடக்கிறது. கடந்த மே மாதம் 3ஆம் தேதி நடக்கவிருந்த தேர்வு கொரோனா முடக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு நாளை நடக்கிறது. தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளிலும் இருந்து எழுந்த எதிர்ப்பையும் மீறி நாளை தேர்வு நடக்கிறது.
இதன்படி நாளை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடக்கவுள்ளது. நாடு முழுவதும் 3,842 மையங்களில் 15,97,433 மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் 238 தேர்வு மையங்களில் 1,17,990 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். ஏற்கனவே ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், சிலருக்கு தேர்வு மையங்கள் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால், மாணவர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.
குறிப்பாக, தமிழகத்தில், வேலூரில் 2 தேர்வு மையங்கள் மாற்றப்பட்டு இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும், இந்த தகவலை குறுஞ்செய்தி வாயிலாக வாட்ஸ் அப்களுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கையுறை
- மாஸ்க், கையுறை, முகத்தை மறைக்கும் ஷீல்ட்.
- லூசான ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். ஜீன்ஸ், சல்வார், நீளமான ஸ்கர்ட், டிரவுசர், டி சர்ட்ஸ், சர்ட் ஆகியவற்றை அணிந்து வரலாம்
- முழுக்கை சட்டை, பெரிய பட்டன் கொண்ட சட்டைகள், அடர் நிறம் கொண்ட ஆடைகளை அணியக் கூடாது. கட்டாயம் ஷூ அணிந்து வரக் கூடாது. செருப்பு அணிந்து வரலாம்
- நகைகளை அணிந்து வரக் கூடாது. மதம் சார்ந்த நகைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- தலையில் ஸ்கார்ப் மற்றும் தலைப்பாகை அணிந்து வரலாம், ஆனால், பரிசோதிக்கப்படுவார்கள்.
- வாட்ச் எந்த காரணம் கொண்டும் அணிந்து வரக் கூடாது.

தண்ணீர் பாட்டில்
- ஹால் டிக்கெட் எடுத்து வர வேண்டும். அரசு வெளியிட்டு இருக்கும் போட்டோ ஐடி கார்டு, PwD சான்றிதழ் கட்டாயம் எடுத்து வரவேண்டும்.
- பால் பாயின்ட் பென் தான் கொண்டு வரவேண்டும்.
- செல்போன், புளூடூத், இதுபோன்ற தகவல்களை பரிமாறும் வேறு எந்த சாதனங்களையும் எடுத்து வரக் கூடாது.
- தண்ணீர் பாட்டில் கொண்டு வரலாம். ஊடுருவல் போன்றதாக பாட்டில் இருக்க வேண்டும். சானிடைசர் கொண்டு வரலாம். தேர்வு மையங்களில் தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டு இருக்காது.
- பைகள், சிறுதீனிகள், புத்தகம், பிரின்ட் எடுக்கப்பட்ட பேப்பர்கள், கொண்டு வரக்கூடாது.
- எந்தக் காரணம் கொண்டும் கைநாட்டு ஹால் டிக்கெட்டில் வைத்து இருக்கக் கூடாது.

தனியாக அமர வேண்டும்
தேர்வு மையங்களுக்குள் செல்வதற்கு முன்பாக உடல் வெப்பநிலை சரிபார்க்கப்படும். 99.4 டிகிரிக்கு மேல் இருந்தால், 20 நிமிடம் தனியாக அமர வைக்கப்படுவார்கள். அதன் பின்னரும் உடல் வெப்பநிலை குறையவில்லை என்றால் தனி அறையில் வைத்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
Recommended Video

தேர்வு அறை
தேர்வு முடிந்ததும், ஹால் டிக்கெட்டில் கேட்டு இருக்கும் விவரங்களை சரியாக பூர்த்திசெய்து, தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்வு எழுத வரும் மாணவர்கள் கண்டிப்பாக சமூக மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications