நீட் தேர்வு மதிப்பெண் வழக்கு.. அசல் விடைத்தாளை காட்டுங்க.. என்டிஏ-வுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நீட்தேர்வு மதிப்பெண் குறைபாடு தொடர்பாக மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கில், அசல் விடைத்தாளை காண்பிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இதனையடுத்து, இதனையடுத்து, உத்தேச விடைத்தொகுப்பும், தேர்வரின் OMR விடைத்தாளையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இந்த OMR செயல்முறையில் ஏதேனும் குறைகள் இருந்தால், தேர்வர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நீட்தேர்வு மதிப்பெண் குறைபாடு தொடர்பாக நீலிகிரி மாணவி ஒருவர் தொடர்ந்த வவழக்கில், அசல் விடைத்தாளை காண்பிக்க தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி கிறிஸ்மா விக்டோரியா என்கிற மாணவி, சென்னை உயர்நீரிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஜூலை மாதம் நடந்த நீட் தேர்வுக்கான விடைத்தாள்கள், ஜூலை 31ஆம் தேதி வெளியிடபட்டது. அதில் 720 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட நீட் தேர்வின் மதிப்பெண் பட்டியலில், 65 மதிப்பெண் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே, தனது விடைகள் முறையாக மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, அசல் விடைத்தாளை காண்பிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் மாணவி கிறிஸ்மா விக்டோரியா கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ள மனுதாரர், நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்கு வந்தால், விடைத்தாளை சரிபார்ப்பதற்காக காண்பிக்க தயாராக இருப்பதாக தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமையில் விடைத்தாளை காண்பிப்பதற்கான தேதியை, 10 நாட்களில் நிர்ணயித்து, மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டார்.
மேலும், அந்த தேதியில் நொய்டா வரும் அந்த மாணவிக்கு, அவரது சந்தேகம் தீரும் வகையில், அசல் விடைத்தாளை காண்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.
-
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications