தமிழகம் அழைத்துவரப்பட்ட நெல்லை கல் குவாரி உரிமையாளர்கள்.. போலீஸ் நிலையத்தில் கிடுக்கிப்பிடி விசாரணை
சென்னை: திருநெல்வேலி கல்குவாரி விபத்து தொடர்பாக கர்நாடக மாநிலம் மங்களூரில் பதுங்கிய கல்குவாரி உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரையும் தமிழகம் அழைத்து வந்து முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகாவில் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் உள்ளது.
இங்குள்ள கல்குவாரியில் கடந்த 14ம் தேதி பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த இடிபாடுகளுக்குள் 6 பேர் சிக்கியுள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இடிபாடுகளுக்குள் சிக்கிய 6 பேர்
பொக்லைன் மற்றும் லாரி டிரைவர்களான நாங்குநேரி அருகே உள்ள காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 30), தச்சநல்லூர் ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் (35), இளையநயினார் குளத்தைச் சேர்ந்த செல்வம் (27), விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளம் பகுதியை சேர்ந்த விஜய் (27), பொக்லைன் கிளீனர் ஆயன்குளத்தைச் சேர்ந்த மற்றொரு முருகன் (23) ஆகிய 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

தொடரும் மீட்பு பணி
இதில் செல்வகுமார், செல்வம், முருகன் ஆகியோர் பலியானார்கள். விட்டிலாபுரம் முருகன், நாட்டார்குளம்விஜய் ஆகியோர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தச்சநல்லூர் அருகே ஊருடையான்குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரனை தேடும்பணி நடந்து வருகிறது. மழை பொழிவு, பாறை சரிவால் அவ்வப்போது மீட்பு பணி பாதிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகத்தில் கைது
இதற்கிடையே கல்குவாரி உரிமையாளர்கள் தப்பித்து சென்றனர். விபத்து தொடர்பாக திசையன்விளையை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். கர்நாடக மாநிலம் மங்களூரில் பதுங்கிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

நெல்லையில் விசாரணை
இந்நிலையில் மங்களூரில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பபட்டனர். அங்கு ஏஎஸ்பி ரஜத்சதூர்வேதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் விபத்துக்கான காரணம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications