தமிழ்நாட்டில் 6 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள்.. பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் 6 இடங்களில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படும் என்றும் .காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதல் பட்ஜெட்
காலை 10 மணி முதல்மதியம் வரை சுமார் 3 மணி நேரம் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்துள்ளார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். பொதுமக்கள் எதிர்பார்த்த பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கிராமங்களின் வளர்ச்சி மேம்பாட்டுக்கு பல்வறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மீன்வளத்துறை
பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற அறிவிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டின்போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீனவர்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். அதனை இப்போது காண்போம். மீன்வளத்துறைக்கு ரூ.1,149.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மீன்பிடித்துறைமுகங்கள்
புதிதாக 6 இடங்களில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்க ரூ.6.25 கோடி செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழை பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் கருத்து
ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. அரசியல் தலைவர்களும் பட்ஜெட் குறித்து அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications