இந்திய தேசிய லீக் கட்சியை கலைக்க வேண்டும்... நிர்வாகிகள் போர்க்கொடி
சென்னை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மாற்றாக தொடங்கப்பட்ட இந்திய தேசிய லீக் கட்சியை கலைக்க வேண்டும் என அக்கட்சியின் நிர்வாகிகள் திடீர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
முஸ்லீம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை போக்க வேண்டுமானால் நலிவடைந்த இஸ்லாமிய கட்சிகள் கலைக்கப்பட்டு ஒரே அமைப்பாக திரள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே இந்திய தேசிய லீக் கட்சியின் தேசியப்பொதுச்செயலாளர் நிஜாமுதீன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதோடு கட்சியையும் கலைக்குமாறு கடிதம் எழுதியுள்ளார்.

மாற்றுக்கட்சி
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அதை தடுக்க தவறிவிட்டதால், அந்தக் கட்சியுடன் முஸ்லீம் லீக் கூட்டணி அமைக்கக் கூடாது என சுலைமான் சேட் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதனை ஏற்காமல் காங்கிரஸுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணி அமைத்தது. இதனால் வெகுண்டெழுந்த சுலைமான் சேட் சாஹிபு இந்திய தேசிய லீக் என்ற கட்சியை 1996-ல் தொடங்கினார்.

எம்.எல்.ஏக்கள்
இந்திய தேசிய லீக் தொடங்கப்பட்ட போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மாற்றுக்கட்சியாக திகழ்ந்தது. இதனால் ஏராளமான நிர்வாகிகள் முஸ்லீம் லீக் கட்சியில் இருந்து வெளியேறி இந்திய தேசிய லீக் கட்சியில் இணைந்தனர். அதன் எதிரொலியாக கேரளா, தமிழகம், கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை எல்லாம் பெற்றது.

தேக்க நிலை
ஆனால் கால ஓட்டத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் செயல்பாடுகளிலும் அதன் தலைமையின் நடவடிக்கைகளிலும் தேக்க நிலை உண்டானது. இது கட்சியின் வளர்ச்சியை அதலபாதாளத்தில் வீழ்த்தியது. இதனிடையே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மீண்டும் உயிர்ப்புடன் செயல்படத்தொடங்கியது. இன்றும் கேரளா மற்றும் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.

எண்ணற்ற கட்சிகள்
மேலும், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி, தவ்ஹீத் ஜமாத், மனிதநேய ஜனநாயக கட்சி, அக்பர்தீன் ஒவைசி கட்சி என பல இஸ்லாமிய கட்சிகள் புதிதாக தோன்றின. இதனால் சுலைமான் சேட் சாஹிபால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய லீக் கட்சி அடியோடு ஆட்டம் கண்டது. பெயரளவுக்கு நிர்வாகிகள் உள்ளனரே தவிர சொல்லிக்கொள்ளும் வகையில் செயல்பாடுகள் இல்லை.

போர்க்கொடி
இதனால் இந்திய தேசிய லீக் கட்சியை கலைக்க வேண்டும் என்றும், இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மனதில் வைத்து செயல்படாமல் உள்ள இயக்கங்களை அதன் தலைவர்கள் கலைத்துவிட்டு ஒரே அமைப்பாக திரள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறார் நிஜாமுதீன். இவர் இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications