நீலகிரி,குமரியில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை..ரெயின் கோட் அவசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : நீலகிரி, குமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் ராமநதி அணையில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கன்னடியன் அணைக்கட்டு, திருநெல்வேலியில் தலா 7 செ.மீ., அம்பாசமுத்திரம், சேரன்மாதேவியில் தலா 4 செ.மீ., செங்கோட்டை, பாளையங்கோட்டை, பெருஞ்சாணியில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Nilgiris, Kumari with thunder and lightning rain says Met office

இன்று அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இருந்து வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடல் பகுதிக்கு வரும் என கணிக்கப்பட்டுள்ளது.

கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழைபெய்து வருகிறது. 19ம் தேதி வரை இதே நிலை நீடிக்கும். அடுத்த இரண்டு நாட்களில் வங்கக் கடலில் உள்ள காற்றழுத்தம் வலுப்பெற்று தமிழக கடலோர பகுதிக்கு நெருங்கி வரும். அத்துடன் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் வாய்ப்பும் உள்ளது. அதனால், தமிழகத்தில் 20ம் தேதி முதல் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் ராமநதி அணையில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கன்னடியன் அணைக்கட்டு (நெல்லை), திருநெல்வேலியில் தலா 7 செ.மீ., அம்பாசமுத்திரம், சேரன்மாதேவியில் தலா 4 செ.மீ., செங்கோட்டை, பாளையங்கோட்டை, பெருஞ்சாணியில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஆழ்கடல் மீன்படி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களுக்கு செல்லவும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+