Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்த" 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது.. சென்னை ஆட்சியர் பரபரப்பு அறிக்கை! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மிலாடி நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 28ஆம் தேதியும் அக்டோபர் 2ஆம் தேதியும் மதுபான கடைகளை அடைக்க வேண்டும் என சென்னை ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

No tasmac shops to be opened on Miladi Nabi and Gandhi Jayanthi in Chennai

சென்னை மாவட்ட கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மிலாடி நபியை முன்னிட்டு நாளை மறுநாள் (வியாழக்கிழமை), காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆகிய 2 நாட்கள் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003-ன் படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதைச்சார்ந்த பார்கள், எப்.எல்.-2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்.-3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.-3 (ஏ), எப்.எல்.3 (ஏ.ஏ.) மற்றும் எப்.எல்.11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது.

தவறினால் மதுபானம் மற்றும் விற்பனை விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+