ஸ்டாலின் அவர்களே! குருமூர்த்திபோல் எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல! சுப்பிரமணியசாமி எச்சரிக்கை
சென்னை: திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்திக்கு எதிராக வழக்கு தொடர அனுமதிகோரி ஆளுநர் ஆர்என்ரவிக்கு பாஜக சுப்பிரமணியசாமி கடிதம் எழுதிய நிலையில், அதனை டுவிட்டரில் பகிர்ந்து "ஸ்டாலின் அவர்களே குருமூர்த்தி போல் அனைத்து பிராமணர்களும் கோழைகள் அல்ல" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி. இவர் இந்த மாதத்தின் துவக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் ஒன்று அளித்தார்.
அதில் திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்திக்கு எதிராக புகார் தெரிவித்து இருந்தார். மேலும், தேர்தல் ஆணைய விதியை மீறியுள்ளதால் திமுகவின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

கடிதத்தில் இருந்தது என்ன?
இதுதொடர்பாக அவர் தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில், ‛‛திமுக செயலாளர் தேர்தல் ஆணைய விதிகளை மீறி கருத்து தெரிவித்துள்ளார். பிராமணர்களை இனஅழிப்பு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதுதான் பெரியாரின் கொள்கை என தெரிவித்துள்ளார். இது தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாக்குரிமையை செலுத்த முடியாத நிலை கூட வரலாம். இதன்மூலம் தேர்தலில் வெற்றி பெற திமுக முயற்சிக்கிறது. இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும். மேலும் திமுகவின் பதிவை தேர்தல் ஆணையத்தில் இருந்து நீக்க வேண்டும்'' என கூறியிருந்தார். இது நிலுவையில் உள்ளது.

தமிழக ஆளுநருக்கு கடிதம்
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கு இன்று சுப்பிரமணியசாமி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி 2022 ஜூன் 3 ஆம் தேதி தமிழ் பிராமணர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என டுவிட்டரில் கூறியுள்ளார். இதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 196இன் கீழ் வழக்குத் தொடர அனுமதி அளிக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.

சிறப்புரிமையை பயன்படுத்த...
மேலும் மன்மோகன் சிங், (2012) 3 SCC 1 வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் மேற்கொள்காட்டியுள்ளார். பொது அமைதியைக் குலைக்கும் வகையில், நீதியின் நலன் கருதி, உங்கள் அரசியலமைப்புச் சிறப்புரிமையைப் பயன்படுத்தி, மேற்படி புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.

அனைவரும் கோழைகள் அல்ல
இந்த கடிதத்தை தற்போது சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‛‛ஸ்டாலின் அவர்களே, பிராமணர்களிடையே கடினமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று ராஜீவ் காந்தியிடம் சொல்லுங்கள். குருமூர்த்தி போல் அனைவரும் கோழைகள் அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications