சென்னை, கோவை கிட்டயே நெருங்க முடியாது.. தமிழ்நாட்டிலேயே பணக்கார மாவட்டம் செங்கல்பட்டு
சென்னை: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும், உலகத்தரத்திலான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், 54 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வாயிலாக 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்றிருப்பது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளன. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 758 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மொத்த வேலைவாய்ப்பில் 50 சதவீதத்திற்கும் மேல் ஆகும்.
ஒரு நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும், உலகத்தரத்திலான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உருவாக்கப்படுவது வழக்கம். ஒரு மாநிலத்தில் குறிப்பிட்ட பகுதியில் வளர்ச்சியை அதிகரிக்க அந்த பகுதியில் அரசே நிலம் கொடுத்து, கட்டிங்கள் கொடுத்து, வரி சலுகை கொடுத்து நிறுவனங்களை கொண்டு வருகின்றன. அப்படி உருவாக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களால் வேலைவாய்ப்பு பெருகும்.

அந்தவகையில் இந்தியாவில் அதிக பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்போதைய நிலவரப்படி அதிக சிறப்பு பொருளாதார மண்டலங்களை கொண் மாநிலம் என்றால், அது தமிழ்நாடு தான் . இந்தியாவில் மொத்தம் 276 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இருக்கின்றன. அதில் தமிழ்நாட்டில் தான் அதிகபட்சமாக 54 மண்டலங்கள் உள்ளன. அதற்கடுத்தபடியாக மகாராஷ்டிரா தெலுங்கானா, கர்நாடக மாநிலங்கள் உள்ளன.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து கடந்த 2024-25-ம் ஆண்டில் மட்டும் எவ்வளவு ஏற்றுமதி செய்யப்பட்டன? அதன்மூலம் எவ்வளவு வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன? என்ற புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன.
இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் 2024-25-ம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 501 கோடி மதிப்பில் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. 54 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் அதன்மூலம் 6 லட்சத்து 99 ஆயிரத்து 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 403 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 3 லட்சத்து 57 ஆயிரத்து 758 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. ஒட்டுமொத்த ஏற்றுமதியில் செங்கல்பட்டில் மட்டும் 70 சதவீதமும், வேலைவாய்ப்புகளில் 51.16 சதவீதமும் பதிவாகி உள்ளது. செங்கல்பட்டுக்கு அடுத்தபடியாக சென்னை மாவட்டத்தில் ரூ.34 ஆயிரத்து 837 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது அதில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 687 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் ரூ.12 ஆயிரத்து 710 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 38 ஆயிரதது 427 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. கோவைக்கு அடுத்தபடியாக காஞ்சிபுரத்தில் 5463 கோடி மதிப்பில் ஏற்றுமடித செய்யப்பட்டுள்ளது. 150004 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2903 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 15362 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை, திருநெல்வேலி, மதுரை, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்றுமதி அதிக அளவில் உள்ளது. இந்த மாவட்டங்களில் சுமார் 2000 முதல் 1200கோடி வரை ஏற்றுமதி நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications