ஜெயக்குமார் ஆதரவாளரை ரத்தம் வர தாக்கிய சம்பவம்.. ஓபிஎஸ் தரப்பின் முக்கிய புள்ளி மீது வழக்குப்பதிவு!
சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 18ஆம் தேதி நடந்த நிர்வாகிகள் கூட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர் மாரிமுத்து என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 6 பிரிவுகளில் ராயப்பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஜெயக்குமாரின் ஆதரவாளரை தாக்கியதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில்
அதிமுகவில் நிலவி வரும் கடுமையான குழப்பங்களுக்கு மத்தியில் கடந்த 18ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தார். அதையொட்டி, ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அதிகளவில் அங்கு திரண்டிருந்தனர்.

ரத்தக் காயம்
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் கொந்தளிப்பில் இருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஜெயக்குமார் வந்தபோது, அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும், ஜெயக்குமார் ஆதரவாளரான பெரம்பூர் பகுதி முன்னாள் செயலாளர் மாரிமுத்து (59) என்பவரை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த சிலர், நீ என்ன ஜெயக்குமார் ஆதரவாளரா எனக் கேட்டு தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மாரிமுத்து ரத்தக் காயமடைந்தார்.

புகார்
இதையடுத்து, உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மாரிமுத்து. அதனைத் தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை முடித்து கடந்த 25ஆம் தேதி ராயப்பேட்டை காவல் நிலையம் வந்த மாரிமுத்து, தன்னை தாக்கியவர்கள் மீது புகார் அளித்தார். மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

வழக்குப்பதிவு
அதன்படி, அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், சட்ட விரோதமாக கூடி கலகம் செய்தல், ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளிம் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி போட்ட 3 கண்டிஷன்? தஞ்சையில் தினகரன் சொன்ன 1 விஷயம்.. உடைந்தது அரசியல் மர்மம் -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக -
கையில் கறுப்பு-சிவப்பு கயிறு.. பாக்கெட்டில் ஸ்டாலின் படம்! தென்மாவட்டங்களில் அடித்து தூக்கும் ஓபிஎஸ் -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கதி அதோ கதிதான்.. புட்டுபுட்டு வைத்த அதிமுக முன்னாள் நிர்வாகி -
கூட்டணி தர்மம் காற்றில் பறக்குது.. தேமுதிக மட்டும்தான் இருக்கும்.. திமுகவை கழற்றிவிட்ட கூட்டணிகள்? -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு!












Click it and Unblock the Notifications