ஜெயக்குமார் ஆதரவாளரை ரத்தம் வர தாக்கிய சம்பவம்.. ஓபிஎஸ் தரப்பின் முக்கிய புள்ளி மீது வழக்குப்பதிவு!
சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 18ஆம் தேதி நடந்த நிர்வாகிகள் கூட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர் மாரிமுத்து என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 6 பிரிவுகளில் ராயப்பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஜெயக்குமாரின் ஆதரவாளரை தாக்கியதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில்
அதிமுகவில் நிலவி வரும் கடுமையான குழப்பங்களுக்கு மத்தியில் கடந்த 18ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தார். அதையொட்டி, ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அதிகளவில் அங்கு திரண்டிருந்தனர்.

ரத்தக் காயம்
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் கொந்தளிப்பில் இருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஜெயக்குமார் வந்தபோது, அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும், ஜெயக்குமார் ஆதரவாளரான பெரம்பூர் பகுதி முன்னாள் செயலாளர் மாரிமுத்து (59) என்பவரை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த சிலர், நீ என்ன ஜெயக்குமார் ஆதரவாளரா எனக் கேட்டு தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மாரிமுத்து ரத்தக் காயமடைந்தார்.

புகார்
இதையடுத்து, உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மாரிமுத்து. அதனைத் தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை முடித்து கடந்த 25ஆம் தேதி ராயப்பேட்டை காவல் நிலையம் வந்த மாரிமுத்து, தன்னை தாக்கியவர்கள் மீது புகார் அளித்தார். மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

வழக்குப்பதிவு
அதன்படி, அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், சட்ட விரோதமாக கூடி கலகம் செய்தல், ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளிம் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications