பழைய ஓய்வூதியத் திட்டம்! அரசு ஊழியர்களுக்கு பென்சன் வராதா? கருப்பு பேட்ஜுடன் தலைமை செயலக பணியாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் தமிழக அரசு ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசின் ஓய்வூதியக் குழுவானது, தன்னுடைய இடைக்கால அறிக்கை அளித்ததற்கு கண்டனம் தெரிவித்து, தலைமை செயலக பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய 3 ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து,9 மாதங்களில் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், 3 அதிகாரிகள் கொண்ட குழு கடந்த பிப்ரவரி மாதம் அரசால் அமைக்கப்பட்டது.

Old Pension Scheme Government Employees tn government

பென்ஷன் எப்போது

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவானது, 194 அரசுப் பணியாளர் சங்கங்களுடன் 9 சுற்று கூட்டங்களை அக்குழு நடத்தியதுடன், தனது இடைக்கால அறிக்கையையும் தமிழக அரசிடம் சமீபத்தில் சமர்ப்பித்திருந்தது.

அத்துடன், புள்ளி விவரம், தரவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், மத்திய அரசு, சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடன் கூடுதலாக கலந்தாய்வுகள் நடத்த உள்ளதாலும், கூடுதல் அவகாசத்தை கேட்டிருந்தது. இதையடுத்து, ஓய்வூதியம் தொடர்பான குழுவுக்கு காலஅவகாசத்தையும் அரசு அளித்துள்ளது.

இதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தினர் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.. ஓய்வூதியக்குழு தன்னுடைய நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக காட்டமாக கருத்து கூறியிருந்த அச்சங்கத்தினர், கருப்பு பேட்ஜ் அணிந்து அக்டோபர் 6ம் தேதி பணியில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்திருந்தனர்.

பழைய ஓய்வூதியத் திட்டம்

இதுதொடர்பாக தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் சு.ஹரிசங்கர் ஆகியோர் கூட்டாக சேர்ந்து அறிக்கை ஒன்றையும் முன்கூட்டியே வெளியிட்டிருந்தனர்.

மேலும், முதலமைச்சர் இந்த விஷயத்தின் தீவிரத்தை மனதில் கொண்டு, உடனடியாக தலையிட்டு, திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் தங்களது அறிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தனர்.

கருப்பு பேட்ஜூடன் பணி

அதன்படியே, தலைமைச் செயலகத்தில் நேற்று ஊழியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

அதன்படியே, நேற்று தலைமைச் செயலக பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.. தமிழக அரசுக்கும், குழுவுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தலைமை செயலக சங்கத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்றைய தினம் பணிபுரிந்தனர்..

இதில், அனைத்து வகை அலுவலர்கள், பணியாளர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மோசமான செயல்பாடு

இது சம்பந்தமாக தலைமை செயலக பணியாளர் ஒருவர் சொல்லும்போது, "ஓய்வூதியக் குழு அமைத்தபோதே, இந்தக் குழு தேவையற்றது என்று சொன்னோம்.. இப்போது இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ததை ஏற்க முடியாது. இதை கண்டிக்கவே கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிகிறோம்.

இப்போதாவது இதில் அரசு தலையிட்டு உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வரும் தேர்தலில் ஓய்வூதிய குழுவின் மோசமான செயல்பாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+