தமிழகத்தில் ஓமிக்ரான் முன்னெச்சரிக்கை.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த "முக்கிய" உத்தரவு!

உருமாறிய கொரோனா ஓமிக்ரான் வைரஸ் பரவலைக் கண்காணிக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் முதலில் தகுதியுடையோருக்கான தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவ கட்டமைப்புகளை கண்காணிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்து, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில் ஓமிக்ரான் என்ற பேரில், கொரோனா மூன்றாவது அலை தலைத்தூக்கியுள்ளது. ஒமைக்ரானை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் ,சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் இன்று காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது.

மருத்துவ கட்டமைப்பு

மருத்துவ கட்டமைப்பு

மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் முதலில் தகுதியுடையோருக்கான தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவ கட்டமைப்புகளை கண்காணிக்க வேண்டும் என்றும் தேவைக்கேற்ப அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

கட்டாய பரிசோதனை

கட்டாய பரிசோதனை

அதேபோல் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்படுமாயின் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் உடனடியாக வழங்கவும், அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஒரு வாரத்திற்கு தனிமை

ஒரு வாரத்திற்கு தனிமை

அத்துடன் அவர்களுடன் பயணம் செய்யும் சக பயணிகளை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் நெகட்டிவ் என்று வந்தாலும் ஒரு வாரத்திற்கு அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களின் மாதிரிகளை மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதை சோதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Omicron-க்கு எதிராக Covishield, Covaxin வேலை செய்யுமா? | Oneindia Tamil
    கண்காணிப்பு அவசியம்

    கண்காணிப்பு அவசியம்

    துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் இந்த நடைமுறையை தொடர்ந்து பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் அதிகரித்து தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+