Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளி வேற நெருங்குதே.. சென்னை முடிச்சூர் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் எப்போது திறக்கப்படும்? வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்தே கிளம்பி வரும் நிலையில், ஆம்னி பஸ்களுக்கு என தனியாக பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முடிச்சூரில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இந்த பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை என தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. சென்னையில் போக்குவாத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால், சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் தற்போது பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

mudichur

சென்னை கோயம்பேட்டில் ஆம்னி பஸ்களுக்கு என தனியாக பேருந்து நிலையம் இருந்தது. ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி செல்லவும் உள்ளேயே வசதி உள்ளது. ஆனாலும் ஆம்னி பஸ்களை நிறுத்தி வைப்பதற்கும் பராமரிப்பதற்கும் பேருந்து நிலையத்திற்குள் போதிய வசதிகள் இல்லை. இதனால், ஆம்னி பஸ்களுக்கு என தனியாக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது.

முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பளவில் 42.7 கோடி செலவில் ஆம்னி பஸ்களுக்கு தனியாக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பேருந்து நிலையத்தில் மொத்தம் 117 பஸ்கள் நிறுத்த முடியும். மேலும் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அறைகளில் 100 பணியாளர்கள் வரை தங்க முடியும். கடந்த சில மாதங்களாக ஆம்னி பஸ் நிலைய கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.

தற்போது 95 சதவிகித பணிகள் முடிந்து விட்டது. ஆம்னி பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையை பிரதான சாலைகளில் இணைக்கும் வகையில் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு முன்பாக அதாவது இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆம்னி பஸ் நிலையத்தில் உணவகங்கள், கழிப்பறை, தண்ணீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன்.

பேருந்து நிலையம் கட்டுமான பணியின் போது அதிக அளவு தண்ணீர் தேங்கியது. இதனால், தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் தரை தளம் உயர்த்தி கட்டப்பட்டுள்ளது. இதனால், மழை காலத்தில் தண்ணீர் தேங்காது என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. தீபாவளி நெரிசலை சமாளிக்கும் வகையில் அதற்கு முன்பே ஆம்னி பஸ் நிலையம் திறக்கப்பட்டு விடும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் முடிச்சூர் அருகே புதிய ஆம்னி பேருந்து நிலையம் அமைத்து உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+