பாருங்க, ஓபிஎஸ்சின் 'முக்கிய' கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.. வெற்றி எடப்பாடிக்கே: இன்பதுரை
அதிமுக எடப்பாடி பக்கம் இருப்பதை நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது என்று இன்பதுரை கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக எடப்பாடி பக்கம் இருப்பதை நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது என்றும் ஏ பார்ம், பி பார்ம்களில் நாங்கள் கையெழுத்திடுகிறோம் என்று ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டதை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது என்று இன்பதுரை கூறியுள்ளார்.
அதிமுக வழக்கறிஞரும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான இன்பதுரை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து கூறியதாவது: அதிமுக எடப்பாடி பக்கம் இருப்பதை நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது. சென்னை டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பு அமலில் இருக்கும் போது அந்த தீர்ப்பை ஏன் எடுத்துக்கொண்டு இணையத்தளத்தில் பொதுக்குழுவின் தீர்மானங்களை ஏன் பதிவேற்றம் செய்யவில்லை என்று கேட்டார்கள். தேர்தல் ஆணையத்தின் அளித்த பதில் திருப்திகரமாக இல்லாததால் நீதிமன்றம் அவர்களாகவே முன் வந்து ஒரு தீர்வை சொன்னார்கள்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை தேர்தலில் போட்டியிட விடாமல் முடக்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது. சின்னத்தை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியது. எனவே சின்னத்தை பயன்படுத்துவதற்கு வசதியாக நாங்கள் ஒரு தீர்வை அளிப்பதாக சொன்னார்கள். எடப்பாடி அறிவித்த வேட்பாளரை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், ஏ பார்ம், பி பார்ம்களில் நாங்கள் கையெழுத்திடுகிறோம் என்று ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதிமுக வேட்பாளர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறார். எனவே அவரது பெயரை ஒரு சுற்றறிக்கையில் எழுதி பொதுக்குழு உறுப்பினர்களுடைய கையொப்பம் இட்ட ஆதரவை பெற வேண்டும். பொதுக்குழுவை கூட்ட நேரம் இல்லை. எனவே சுற்றறிக்கையை தயார் செய்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதை அனுப்பி அவர்களுடைய ஆதரவு கையொப்பத்தை பெற்று அதை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். அதில் பெருவாரியான ஆதரவை பெறும் வேட்பாளருக்கு அவைத்தலைவர் அளித்த கடிதத்தின் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆனையம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications