அத்துமீறும் பாகிஸ்தான்.. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் உச்சக்கட்ட உஷார் நிலை
காஷ்மீர்: இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையத்திலும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதேபோன்று, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களிலும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை வேட்டையாடும் நோக்கில் பாகிஸ்தானில் உள்ள அவர்களது முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் இந்திய எல்லைப்பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

போர் பதற்றத்தை தூண்டும் பாகிஸ்தான்
இந்த நிலையில் பாகிஸ்தான் அத்துமீறி போர் பதற்றத்தை தூண்டி வருகிறது. இந்த நிலையில் தான் ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் இருந்து வந்த 8 ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தது.
பாகிஸ்தானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் காரணமாக ஜம்மு காஷ்மீர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல பஞ்சாபில் குருதாஸ்பூர் மாட்டத்தில் இரவு 9 மணிக்கு தொடங்கி, அதிகாலை 5 மணிவரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு விளக்குகள் அணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று இரவு திடீரென பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறின.
3 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன
இந்த விமானங்களை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தானின் எப் 16 ரக போர் விமானம் உள்ளிட்ட 3 விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. பதன்கோட் ராணுவ தளத்தில் இருந்த விமானங்கள் பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளன.
ராஜஸ்தன் எல்லை பகுதியிலும் இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையத்திலும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications