பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலத்தை கையகப்படுத்த அதிகாரம் தரும் அரசாணை.. ஐகோர்டில் முக்கிய வாதம்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் பரந்தூர் விமான நிலையத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த அரசாணை சட்டப்படி செல்லாது. மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரிக்கு நிலத்தை கையகப்படுத்த அதிகாரம் வழங்க முடியாது என்று வாதிட்டார். இந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், " காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மகாதேவி மங்களம் கிராமத்தில் எனக்கு 169 சென்ட் நிலம் உள்ளது.

காஞ்சிபுரம்
அதில் என்னுடைய நிலத்தை கையகப்படுத்துவதாக விளக்க நோட்டீசை காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரி எனக்கு அனுப்பி உள்ளார்கள். நிலத்தை கையகப்படுத்துவதற்கு என்னுடைய எதிர்ப்பை தெரிவித்தும், அதை அவர் நிராகரித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
கலெக்டருக்கு அதிகாரம்
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.ராஜசேகர், "நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக சிறப்பு வருவாய் அதிகாரி நோட்டீஸ் வழங்க அதிகாரமே கிடையாது. கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, அந்த அதிகாரம் மாவட்ட கலெக்டருக்குதான் உள்ளது" என்று வாதிட்டார்.
வருவாய் அதிகாரிக்கு அதிகாரம்
அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் சதீஷ் பெருமாள், காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரிக்கு இந்த அதிகாரத்தை வழங்கி 2021-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அந்த அரசாணையை தாக்கல் செய்திருந்தார். அந்த அரசாணையில், நிலத்தை கையகப்படுத்த சிறப்பு வருவாய் அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
வழக்கு தொடர அனுமதி
உடனே மனுதாரர் தரப்பு வக்கீல், "இந்த அரசாணையிலும் விதிமீறல் உள்ளதால், இதை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். இதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் , 2021-ம் ஆண்டு அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர அனுமதித்து விசாரணையை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
அரசாணை செல்லாது
அதன்படி, 2021-ம் ஆண்டு அரசாணையை ரத்து செய்ய கோரி ஸ்ரீபெரும்புதூர் சிவலிங்கம் புதிய வழக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.ராஜசேகர் ஆஜராகி, "இந்த அரசாணை சட்டப்படி செல்லாது.
அதிகாரம் இல்லை
மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரிக்கு நிலத்தை கையகப்படுத்த அதிகாரம் வழங்க முடியாது. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறினார். தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து அரசு தரப்புக்கு அவகாசம் வழங்கி விசாரணையை வருகிற ஏப்ரல் 7-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications