"பருத்தி வீரன்" முத்தழகிக்கு நடந்ததை விட பெரிய வன்முறை.. அமீருக்கு ஆதரவாக இறங்கிய நந்தா பெரியசாமி
சென்னை: பருத்தி வீரன் படத்தில் முத்தழகிற்கு நடந்த கொடுமையை விட மிகப்பெரிய வன்முறையை அதன் இயக்குநர் அமீருக்கு நடத்தியிருக்கிறார்கள்... கார்த்தி என்ற பருத்திவீரனை நம்பிய முத்தழகின் முடிவு வேண்டுமானால் துயரத்தில் முடியலாம் இயக்குநர் அமீருக்கு அப்படியல்ல.. என்று இயக்குனர் நந்தா பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, அந்த படத்தின் இயக்குனர் அமீர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். அமீர் அதிக செலவு செய்தார், படத்தின் காசை திருடினார். அது எனக்கு முதல் படம். ஆனால் நான் கொடுத்த காசை வைத்து படத்தை எடுக்காமல் பணத்தை திருடிவிட்டார் என்று குற்றச்சாட்டு வைத்தார். ஞானவேல் ராஜாவின் இந்த குற்றச்சாட்டு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு இயக்குநர் அமீர் நீண்ட நெடிய விளக்கத்தை அளித்து இருந்தார். அமீருக்கு ஆதரவாக இயக்குனரும் நடிகருமான சசிகுமார், சமுத்திரக்கனி, சேரன் என பலரும் கருத்து தெரிவித்தனர். ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனாலும் இதை ஏற்க முடியாது என சமுத்திரக்கனி உள்ளிட்டோர் கடுமையாக சாடி பதில் அறிக்கை வெளியிட்டனர்.
நந்தா பெரியசாமி: எந்த பொதுவெளியில் அமர்ந்து அருவருப்பான உடல் மொழியால் சேற்றை வாரி இறைத்தீர்களோ.. அதே பொது வெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்..! என்று சமுத்திரக்கனி ஞானவேல் ராஜாவை காட்டமாக விமர்சித்தார். இந்த நிலையில், அமீருக்கு ஆதரவாக பிரபல இயக்குனர் நந்தா பெரியசாமியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நந்தா பெரியசாமி கூறியிருப்பதாவது:-
துரோகமற்ற பருத்தி வீரன்களை: பருத்தி வீரன் படத்தில் முத்தழகிற்கு நடந்த கொடுமையை விட மிகப்பெரிய வன்முறையை அதன் இயக்குநர் அமீருக்கு நடத்தியிருக்கிறார்கள்... கார்த்தி என்ற பருத்திவீரனை நம்பிய முத்தழகின் முடிவு வேண்டுமானால் துயரத்தில் முடியலாம். இயக்குநர் அமீருக்கு அப்படியல்ல... அவர் இன்னும் வீறு கொண்டு எழுவார். படைக்கு அஞ்சாத அவருக்கு கை கோர்க்க தம்பிமார்கள் பலரும் இருக்கிறோம்...
தொழுகை தவறாத அவர் அருகே இறைவனும் சத்தியமும் இருக்கிறது. பகைவனுக்கும் அருள்கின்ற அவர் புன்னகை இன்னும் அவரை பலமாக்கும். துரோகமற்ற பல பருத்தி வீரன்களை அவர் இனி தொடர்ந்து படைப்பார். மாசற்ற ஒரு அற்புதமான மனிதனுக்காக நாம் ஒன்று கூடுவோம்... அவர் பக்கம் துணை நிற்போம்... இவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications