"புரட்டாசி" மாசமா இது? “மீன்” வாங்க கூட்டம் அள்ளுதே.. சென்னை காசிமேடு மீன் வியாபாரிகள் “ஹேப்பி”
சென்னை: பொதுவாக தமிழ்நாட்டில் தமிழ் மாதமான புரட்டாசியில் பெரும்பாலான மக்கள் அசைவ உணவு உண்பதை தவிர்த்துக்கொள்வது பாரம்பரியமாக இருந்து வரும் நிலையில், தற்போது புரட்டாசி மாதத்திலும் மீன் வாங்க சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதி வருகிறது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான புரட்டாசியில் ஆடு, மாடு, கோழி, கடல் உணவுகளின் விலை கடுமையாக சரிவடையும். இதற்கு முக்கிய காரணம் புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான மக்கள் அசைவ உணவை உண்ணக்கூடாது என்ற சடங்கை பின்பற்றுகின்றனர்.
அதேபோல் இந்த ஆண்டும் புரட்டாசி மாதம் தொடங்கியதில் இருந்தே, ஆடு, மாடு, கோழி, முட்டை, மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. இதனால் இம்மாதம் கால்நடைகள், மீன்களை குறைவான அளவிலேயே வாங்கி வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர்.

சென்னை காசிமேடு
ஆனால், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் இந்த புரட்டாசி மாதத்திலும் மீன் வாங்க கூட்டம் அலைமோதி வருகிறது. வழக்கமாகவே ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று சென்னையின் பெரும்பாலான வீடுகளில் அசைவமே மதிய உணவாக இருக்கும். புரட்டாசி மாதத்திலும் அதை சென்னைவாசிகள் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு இன்று காசிமேட்டு மீன் மார்க்கெட்டில் குவிந்த கூட்டமே உதாரணம்.

புரட்டாசி மாதமா இது?
மற்ற மாதங்களில் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் இன்றைக்கும் எந்த வித்தியாசமும் தெரியாத அளவுக்கு அசைவ பிரியர்களால் கலை கட்டிய காசிமேடு மீன் மார்க்கெட் திருவிழா போல காணப்பட்டது. சென்னை காசிமேட்டில் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்களை வாங்க அசைவப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம்.

அலைமோதிய கூட்டம்
ஆனால் புரட்டாசி மாதம் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மீன் விற்பனை மந்தமாக இருந்த நிலையில் இன்று காசிமேட்டில் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது. நள்ளிரவு 2 மணி அளவில் ஏல முறையில் மீன் விற்பனையை மொத்த வியாபாரிகள் தொடங்கினர். சில்லறை வியாபாரிகள் அவற்றை ஏலத்தில் வாங்கி அதிகாலை முதல் விற்பனையை தொடங்கினர். கடந்த 2 வாரங்களைபோல் இந்த வாரமும் விற்பனை மந்தமாக இருக்கும் என்று நினைத்த வியாபாரிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது மக்கள் கூட்டம்.

மீன்கள் விலை
கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் மீன்களின் விலையும் கடந்த வாரத்தை விட சற்று அதிகமாகவே விற்பனை செய்யப்படுகிறது. வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1200, சங்கரா ரூ.400 முதல் ரூ.600 வரை, வவ்வால் ஒரு கிலோ ரூ.800, நெத்திலி ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.350,
இறால் ஒரு கிலோ ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் மக்கள் அதிகளவில் மீன்களை அள்ளிச்சென்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications