அண்ணாமலை மாதிரி எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன்! பாச்சா பலிக்காது! அமைச்சர் சேகர்பாபு சுளீர்!
சென்னை: தனது 45 ஆண்டுகால அரசியல் பொதுவாழ்வில் அண்ணாமலை மாதிரி எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பதவியிலிருந்து சேகர்பாபுவை நீக்க வேண்டும் என பாஜக குரல் எழுப்புவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர் இதனைக் கூறினார்.

மேலும், அண்ணாமலை நடத்தி வரும் என் மண் என் மக்கள் என்ற நடைபயணம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதால் இந்துசமய அறநிலையத்துறை மீது அவர் குற்றஞ்சாட்டி வருவதாக தெரிவித்தார். சனாதனத்தை எந்தளவுக்கு முக்கியம் என்கிறார்களோ அதேபோல் சமத்துவத்தை முக்கியம் என்று அரசும் சொல்லும் அமைச்சர்களும் பேசுவோம் என்றார்.
தாம் 45ஆண்டு கால அரசியல் பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரன் என்றும் இதனால் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள், அச்சுறுத்தல்களை எல்லாம் ஏற்கனவே பார்த்திருக்கிறேன் என கூலாக பேட்டியளித்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு. தங்கள் பணியின் வேகத்தை குறைப்பதற்காக இது போன்ற வேலைகளில் பாஜக ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்யக்கோரி பாஜக தரப்பில் திடீர் போராட்டங்களும், கோரிக்கைகளும் வலுத்து வரும் நிலையில் இந்த விமர்சனத்தை அவர் முன் வைத்துள்ளார். இதுமட்டுமல்ல ஆன்மிகத்தில் மறுமலர்ச்சி செய்திருப்பதாகவும் சேகர்பாபு பெருமிதம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications