வருஷத்துக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும்.. பிஎம் கிசான் நிதி உதவி திட்டம்.. விவசாயிகள் உடனே இதை பண்ணிடுங்க!
குமரி: பிஎம் கிசான் நிதி உதவி திட்டத்தின் 21வது தவணை இந்த மாதம் வெளியிடப்படுகிறது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பிஎம் கிசான் நிதி உதவி திட்டத்தின் 21வது தவணைத்தொகையை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்ற நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆட்சியர் அழகுமீனா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிஎம் கிசான் நிதி
பாரத பிரதமரின் பிஎம் கிசான் நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் அனைத்து விவசாயிகளும், வரும் காலங்களில் தொடர்ந்து மத்திய அரசு வழங்கும் தவணைகளைப் பெற தங்களது நில உடைமை ஆவணங்களை பதிவு செய்து விவசாய அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுவரை தங்களது நில உடைமை விவரங்களை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவு செய்யாத விவசாயிகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்களது நில உடைமை ஆவணங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விவசாயி அடையாள எண் பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது.
உடனே பதிவு செய்யவும்
வேளாண் அடுக்கக வலைதளத்தில் இதுநாள் வரை நில உடைமை விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகள், அருகிலுள்ள இ-சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை ஆதார் எண், கைபேசி எண், நில ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிஎம் கிசான் நிதி உதவி திட்டம் என்பது விவசாயிகளுக்கு பலனளிக்கக்கூடிய சிறந்த திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசால் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.
தீபாவளிக்கு முன்பாக அக்கவுண்டிற்கு வரும்
விவசாயிகளின் வங்கி கணக்கிற்கே நேரடியாக இந்த பணம் வரவு வைக்கப்படுகிறது. மூன்று தவணைகளாக இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்படும்.
கடைசியாக, 20வது தவணை ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. 19வது தவணை பிப்ரவரி 24, 2025 அன்று செலுத்தப்பட்டது. தற்போது விவசாயிகள் 21வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். இந்த தவணைத்தொகை தீபாவளிக்கு முன்பாக செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
7 கோடி விவசாயிகள் பயன்
2 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு இந்த உதவி தொகை அளிக்கப்படுகிறது. ஆதார் கார்ட், வங்கி கணக்கு விவரங்கள், நில உரிமை ஆவணங்கள், மொபைல் நம்பர் ஆகியவற்றை அளித்து இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறலாம். நாடு முழுவதும் சுமார் 7 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications