Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே நாளில்.. குடியரசுத் தலைவர் அடுத்தடுத்து சந்தித்த.. மோடி, அமித் ஷா! டெல்லியில் என்னமோ நடக்குது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் தனித்தனியே சந்தித்தனர். ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த உயர்மட்ட சந்திப்புகளின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் என்ன என்று வெளியிடப்படவில்லை. இந்த தொடர் சந்திப்பு தேசிய அரசியல் வட்டாரங்களில் பெரும் ஊகங்களையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளன.

இந்த சந்திப்புகள் புதிய துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான செயல்முறை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள நேரத்தில் நடைபெற்றுள்ளன. ஆகஸ்ட் 1 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி, செப்டம்பர் 9 அன்று தேர்தல் நடைபெறும்.

Vice President Jagdeep Dhankhar

இதேவேளையில், பீகாரில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர மறுஆய்வு (SIR) செயல்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. எதிர்க்கட்சிகள் விவாதம் கோரும் நிலையில், அரசின் தயக்கம் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறாக உள்ளது.

புவிசார் அரசியல் பின்னணியில், அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக சமீபத்தில் அறிவித்ததும், ரஷ்யாவுடனான இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உறவுகள் குறித்த அறிவிப்புகளும் நிகழ்ந்துள்ளன.

முன்னதாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், பிரதமர் மோடி ஜூலை 16 அன்று குடியரசுத் தலைவரை சந்தித்திருந்தார். இந்த சந்திப்புகளுக்கான சரியான காரணங்கள் வெளிப்படுத்தப்படாத நிலையில், அவற்றின் காலநேரம் அரசியல் வட்டாரங்களில் பல புருவங்களை உயர்த்தியுள்ளது.

குடியரசு துணை தலைவர் விலகல் - தேர்தல்

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உடல்நலக் காரணங்களுக்காகப் பதவி விலகியுள்ளார். அவரின் இந்த முடிவு கடுமையான சில விவாதங்களை எழுப்பி உள்ளன. அதே சமயம் அவரின் இந்த முடிவு பல வதந்திகளுக்கும் வழி வகுத்துள்ளது.

74 வயதாகும் தன்கர் தனது உடல் நலத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தன்கர், "என் ஆரோக்கியத்திற்கு, உடல்நிலைக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாகவும், மருத்துவ ஆலோசனையின்படி இந்திய அரசியலமைப்பின் 67(a) பிரிவின்படி, இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

எழுந்த சந்தேகங்கள் - புரளிகள்

1. ஜெகதீப் தன்கரின் பதவி விலகலுக்கு நீதிபதி வர்மாவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கண்டனத் தீர்மானத்தை அவர் பரிசீலித்தது காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

2. நீதிபதி வர்மாவுக்கு எதிராக இரு அவைகளிலும் கண்டனத் தீர்மானம் கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ராஜ்யசபாவின் அலுவுக் குழுவின் (Business Advisory Committee - BAC) நிகழ்ச்சி நிரலில் இது முக்கிய அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தன்கர் எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை அலுவுக் குழு கூட்டத்தில் கொண்டு வந்து, அடுத்த நாள் மதியம் 1 மணிக்கு அதை எடுத்துக் கொள்வதாகக் கூறியது அரசாங்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மூத்த அமைச்சர்கள் தன்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது அதிருப்தியைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கண்டித்துள்ளனர். இதற்கு பதிலளித்த தன்கர், அரசாங்கத்திடமிருந்து அதிருப்தியை உணர்ந்ததாகவும், அதனால் விரைவில் பதவி விலக நேரிட்டதாகவும் ஒரு பக்கம் கூறப்படுகிறது.

3. அதே சமயம் இவருக்கு இந்த வருடம் 75 வயது ஆகிறது. இதனால் அவர் ராஜினாமா செய்து.. அதன் மூலம் பிரதமர் மோடியை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்கு பின் ஆர்எஸ்எஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது பாஜகவில் 75 வயதுக்கு மேல் பதவி கிடையாது என்ற ரூல் உள்ளது. தன்கர் ராஜினாமா மூலம் மோடிக்கும் ராஜினாமா செய்ய பிரஷர் கொடுக்கலாம் என்கிறார்கள்.

மோடி சந்திப்பு

புதிய துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான செயல்முறை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள நேரத்தில் நடைபெற்றுள்ளன. ஆகஸ்ட் 1 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி, செப்டம்பர் 9 அன்று தேர்தல் நடைபெறும்.

இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் தனித்தனியே சந்தித்தனர். ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+