ஏப்.6ம் தேதி முதல் தாம்ரம்-ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில்! இன்று முன்பதிவு தொடங்குகிறது
சென்னை: ஏப்.6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். இதனை முன்னிட்டு தாம்பரம்-ராமேஸ்வரம் இடையே கூடுதல் ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
தினமும் தாம்பரத்திலிருந்து புறப்படும் இந்த ரயில், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, சிவகங்கை, பரமகுடி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் சென்று சேர்கிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே விடுத்திருந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்.6ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதனை முன்னிட்டு தாம்பரம்-ராமேஸ்வரம் இடையே தினசரி ரயில் சேவைக்கு ரயில்வே துறை ஒப்புதல் அளித்திருக்கிறது. அதன்படி தாம்பரத்திலிருந்து வண்டி எண் 16103 எனும் ரயில் மாலை 6.10 மணிக்கு புறப்படும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய நிறுத்தங்களில் இது நின்று செல்லும். இறுதியாக ராமேஸ்வரத்திற்கு அதிகாலை 5.40 மணிக்கு சென்று சேரும்.
மறுமார்க்கமாக ராமேஸ்வரத்திலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரத்திற்கு வந்து சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ரயில் டெல்டா மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக மாறும் என்று பயணிகள் கூறுகின்றனர். காரணம், சென்னையிலிருந்து திருவாரூருக்கு தினசரி 2 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. வாரத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகிறது. இருப்பினும் பெரும்பாலும் 2 ரயில்கள்தான். ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்பு ரயில் திருவாரூர் மாவட்ட மக்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்று பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.
இருப்பினும் திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு இந்த ரயில் நள்ளிரவில் செல்வதால் பயணிகளிடையே வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications