முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரிக்கவந்த அமைச்சர் எ.வ.வேலு! மருத்துவமனை வாசலில் போலீஸ் அனுமதி மறுப்பு
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரிப்பதற்காக காவேரி மருத்துவமனை வந்த அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழக மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ம் தேதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் பக்கத்தில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கொரோனா பாதிப்புக் காரணமாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரின் உடல்நிலை குறித்து கண்காணித்து, பரிசோதித்து மேற்கொண்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தனர். விரைந்து நலம்பெறவும் வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் முதலமைச்சரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார் என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடன் அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு நலம் விசாரிப்பதற்காக அமைச்சர் எ.வ.வேலு வந்துள்ளார். அவரை மருத்துவமனை வாசலிலேயே தடுத்து நிறுத்திய காவல்துறையினர், உள்ளே செல்வதற்கு அனுமதி மறுத்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பிய போது, குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து வேறு யாரும் மருத்துவமனை வர வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு வந்த சில நிமிடங்களிலேயே புறப்பட்டார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரிக்க திமுக உறுப்பினர்கள் யாரும் வர வேண்டாம் என்று காவல்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை வளாகம் முன் கூட்டம் கூடுவதையோ, முதல்வரை சந்திக்கவோ யாரும் வர வேண்டாம் எனவும், சில நாட்களில் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications