ஒரு பேச்சுக்கு ஜெயக்குமார் சொல்றார்னு பார்த்தா.. நிஜமாகவே சேகர் மீது பாய்ந்த கேஸ்.. ஆனால் கைதாவாரா!
சென்னை: சும்மா ஒரு பேச்சுக்குதான் ஜெயக்குமார் சொல்கிறார் என்று பார்த்தால், நிஜமாகவே எஸ்வி சேகர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.. தேசியக் கோடியை அவமதித்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில நாட்களாகவே எஸ்வி சேகர் பழைய மாதிரி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.. புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழி பாடத்திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.. இந்த விவகாரத்தில் கட்சியின் பிரமுகரான எஸ்வி சேகர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.
இவர் சில தினங்களுக்கு முன்பு அதிமுக பற்றி ஒரு கருத்து சொல்லி இருந்தார்.. அதாவது அதிமுக உருப்பட வேண்டுமென்றால் கட்சியின் பெயரையும், கொடியையும் மாற்ற வேண்டும் என்றார். இதை பார்த்து அதிமுகவினர் கொந்தளித்துவிட்டனர்.

ஜெயக்குமார்
இதற்கு முதல் நபராக வந்து கண்டனம் சொன்னது அமைச்சர் ஜெயக்குமார்தான்.. அதேபோல முதல்வரும், "எஸ்விசேகர் ஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து விடுவார்" என்றார்.. அமைச்சர் காமராஜோ, பிஜேபி கட்சி எஸ்விசேகரை ஒரு பொருட்டாகவே ஏற்று கொள்வதாக தெரியவில்லை.. அதனால நாமும் அவர் சொல்வதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் கிடையாது என்றார்.

தேசிய கொடி
இப்படி பல தரப்பில் இருந்தும் சர்ச்சைகள் றெக்கை கட்டி பறந்த நிலையில்தான், திடீரென யூ டியூப் சேனலில் ஒரு வீடியோ போட்டு, தேசிய கொடியை எஸ்வி சேகர் அவமதித்திருந்தார்.. அதாவது, "தேசிய கொடியில் உள்ள 3 நிறங்களும் 3 மதத்தினரை குறிக்கும்" என்பது போன்ற வரிகளை தெரிவித்திருந்தார்.

நுங்கம்பாக்கம்
இதனால், எஸ்வி சேகர் மீது நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை தந்திருந்தார்.. மேலும், எஸ்வி சேகர் சர்ச்சை பேச்சு குறித்து நேற்று ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "எஸ்வி சேகர் தேசிய கொடியை அவமதித்ததும், முதல்வர் குறித்து அவதூறாக பேசியதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் நீண்ட காலமாக ஜெயிலுக்கு போக ஆசைப்படுகிறார்... அவரது ஆசையை அதிமுக நிறைவேற்றும் என்று கூறியிருந்தார்.

அவமதிப்பு
இந்நிலையில்தான், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எஸ்விசேகர் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. ராஜரத்தினம் ஏற்கனவே அளித்திருந்த புகாரின் அடிப்படையில்தான் இந்த நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகரும், பாஜக கட்சி பிரமுகருமான எஸ்வி சேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தது பாஜக தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மாரிதாஸ்
பால் பாக்கெட் விவகாரம் என்றால் அதற்கு ஓடிவந்து உதவும் இதே அதிமுகதான், எக்குத்தப்பாக பேசி தேசிய கொடியை அவமதித்தால், இதுதான் கதி என்பதையும் சேகருக்கு உணர்த்தி உள்ளது. அதுமட்டுமல்ல, சமீப காலமாக பாஜக மற்றும் பாஜக ஆதரவு நபர்கள் மீது அடுத்தடுத்து வழக்கு பாய்கிறது. மாரிதாஸ், இப்ப எஸ்வி. சேகர்.. இதெல்லாம் ஏதாவது குறியீடா? எதற்கான சேதி? யாருக்கான சேதி? என்பதுதான் தெரியவில்லை.
-
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications