Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை கார் வெடிப்பு: ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு.. கைதான ஆம்பூர் இளைஞர் வீட்டில் போலீஸ் பரபர சோதனை

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடந்த நிலையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் இளைஞர் வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் அனாஸ் அலி (வயது 22). இவர் மேல்விஷாரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தார்.

இவர் வெளிநாட்டில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.

அதிரடியாக கைது

அதிரடியாக கைது

இவர் சமூக வலைதளங்கள் வாயிலாக பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு திரட்டி வந்ததாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் ஜூலை மாதம் 30 ஆம் தேதி அனாஸ் அலி கைது செய்யப்பட்டார். இவரது மடிக்கணினி, செல்போன், ஹார்ட்டிஸ்கள் உள்பட பல தொழில் நுட்ப சாதனைகளை பறிமுதல் செய்து விசாரித்தனர். அவர் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஜாமீன் மனு தள்ளுபடி

ஜாமீன் மனு தள்ளுபடி

அன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் மத்திய புலனாய்வு காவல்துறையினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் அனஸ் அலியின் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அனாஸ் அலிக்கு ஜாமின் கேட்டு அவரது குடும்பத்தினர் நவம்பர் மாதம் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் முறையீடு செய்து இருந்த நிலையில் அனாஸ் அலிக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடரும் சோதனை

தொடரும் சோதனை

இதற்கிடையே தான் கோவையில் கார் வெடித்த சம்பவம் பரபரப்பானது. இதையடுத்து தமிழகத்தில் என்ஐஏ, போலீசார் உஷாராகி உள்ளனர். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கும் நபர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் பலரது வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனாஸ் அலி வீட்டில் சோதனை

அனாஸ் அலி வீட்டில் சோதனை

இதன் ஒருபகுதியில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலி கொள்ளை பகுதியில் உள்ள அனாஸ் அலியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் புஷ்பபுராஜ் தலைமையில் 25க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். இதில் என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டனர் என்பது பற்றிய விபரங்களை போலீசார் இன்னும் வெளியிடவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+