போலீஸ் ஸ்டிக்கரை பைக், காரில் ஒட்டி இருக்கீங்களா? அப்போ உங்களுக்குதான் இந்த எச்சரிக்கை! உஷார்
சென்னை: தனிப்பட்ட இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
போலீஸ் என்கிற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு விதிகளை மீறுவது, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது போன்ற சம்பவம் சமீப நாட்களாக அதிகரித்துள்ளன. அதேபோல போலீஸ் எனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வரும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் சோதனை செய்ய தயக்கப்படுகின்றனர். இப்படி இருக்கையில், தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் படி உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தேசவிரோதிகள், குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு 'போலீஸ்' ஸ்டிக்கரை தவறாகப் பயன்படுத்துவதால் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்திருப்பதாகவும், இதன் மூலம் குற்ற செயல்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் இருப்பதை அனைத்து பிரிவு அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அதேபோல இது தொடர்பான விதி மீறல்கள் தீவிரமானதாக பார்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு இதுபோன்ற அறிவிப்பை அப்போதைய டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டிருந்தார். அதாவது, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி ஒரு வழக்கில் சில உத்தரவுகளை பிறப்பித்தது. 'காவல் துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களின் கண்ணாடிகளிலும் கருப்பு ஃபிலிம் ஒட்டக் கூடாது. காவலர்கள் தங்கள் தனிப்பட்ட வாகனத்தில் 'போலீஸ்' என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை பயன்படுத்தக் கூடாது' என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, காவல் துறையின் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு தனிப்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!











Click it and Unblock the Notifications