ரஜினிகாந்தை காவிமயமாக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை- பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை காவிமயமாக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியது போல எனக்கும் சிலர் பாஜகவின் சாயம் பூச முயற்சிக்கிறார்கள். வள்ளுவரைப் போல நானும் காவி சாயத்தில் சிக்கமாட்டேன் என்றார். ரஜினிகாந்தின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ரஜினிகாந்த் கருத்தை வரவேற்றுள்ளன. இந்நிலையில் ரஜினிகாந்த் தெரிவித்தது பற்றி முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
ரஜினிகாந்த் நல்ல மனிதர். மனப்பக்குவம் உள்ள மாமனிதர். இன்றைய ரஜினிகாந்த் என்றும் அவ்வாறே இருக்க வேண்டும். ரஜினிகாந்தை காவிமயமாக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை.
ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்லக் கூடியவர். அவருக்கு காவி சாயம் பூச வேண்டியது இல்லை. ரஜினிகாந்துக்கு காவி சாயம் பூசுவதும் பாஜகவின் வேலையும் அல்ல.
பஞ்சமி நில விவகாரத்தை திசைதிருப்பவே திருவள்ளுவர் பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர். சென்னையில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமா? இல்லையா? என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications