தமிழிசையை ஆரத் தழுவி.. கட்டி அணைத்து.. பாசத்தை கலந்து.. பிரேமலதா வாழ்த்து மழை!
தமிழிசை சவுந்தராஜனை நேரில் சந்தித்து பிரேமலதா வாழ்த்து தெரிவித்தார்
Recommended Video
சென்னை: தமிழிசையை ஆரத்தழுவி.. இறுக்கமாக கட்டி அணைத்து.. பாசத்தை கலந்த வாழ்த்தை பொழிந்துள்ளார் பிரேமலதா! இந்த போட்டோதான் வைரலாகி வருகின்றன.
தெலுங்கானா ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தராஜன் நியமனம் செய்யப்பட்டதற்கு பலதரப்பு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஏக மகிழ்ச்சியுடன் தமிழிசைக்கு வாழ்த்து சொன்னது பிரேமலதாவாகத்தான் இருக்க முடியும்.
பிரேமலதாவுக்கு தமிழிசை என்றாலே ஒரு தனி பிரியம்தான். நல்ல மதிப்பையும், அளவில்லாத அன்பையும் தமிழிசை மேல் பொழிபவர்.

கேப்டன்
தமிழிசை நியமனம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா "எங்க வீட்டு பக்கத்து தெருவுலதான் இருக்காங்க. என்னுடைய பெஸ்ட் பிரண்ட் அவங்க. இப்போ "ஆந்திராவின் ஆளுநராக" பதவி கிடைச்சதற்கு முதல் வாழ்த்தை தெரிவித்திருக்கோம். கேப்டனும் போன்ல விஷ் பண்ணாரு. நாளைக்கு நாங்க நேர்ல போய் பார்த்து வாழ்த்து சொல்ல போறோம்.

அழைப்பு
கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பதற்கு உதாரணமாக தமிழிசை செயல்பட்டார். பதவியேற்பு விழாவுக்குகூட எங்களுக்கு அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக கேப்டனுடன் கலந்து பேசி விழாவில் கலந்தது கொள்வது பற்றி முடிவு செய்யப்படும்" என்றார்.

நேரில் சந்திப்பு
இந்நிலையில், சொன்னபடியே தமிழிசையை நேரிலும் சென்று சந்தித்து வாழ்த்து சொல்லி உள்ளார். சாலிகிராமத்தில் உள்ள வீட்டில், தமிழிசை சவுந்தரராஜனை, பிரேமலதா விஜயகாந்த் உட்பட கட்சியின் மாநில செயலாளர் எல்கே. சுதீஷ் உள்பட நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்

போட்டோக்கள்
அப்போது தமிழிசையை கண்டதும் வாரி அணைத்து கொண்டார் பிரேமலதா. தமிழிசையும், பிரேமலதாவை இறுக்கமாக கட்டிக் கொண்டார். இரு பெண்மணிகளின் முகத்திலும் நட்பு கலந்த பாசம் வெளிப்படுவதை பார்த்து உடன் இருந்த நிர்வாகிகளும் பூரித்து போயினர். தமிழிசை-பிரேமலதாவின் இறுக்கமான அணைப்பில் வெளியான இந்த போட்டோக்கள்தான் தற்போது இணையத்தில் வைரலாகின்றன.












Click it and Unblock the Notifications