கெத்து தான்.. தமிழக போலீசாருக்கு ஜனாதிபதி கொடுத்த ‘கொடி’! தென் மாநிலங்ளில் ஒரே மாநிலம்! சூப்பர்ல!
சென்னை : தென் மாநிலங்களில் முதன்முறையாக குடியரசுத் தலைவரின் கொடி தமிழக காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கொடியை ஒப்படைத்தார்.
Recommended Video
இந்திய அளவில் சிறந்து செயல்படும் காவல்துறையினருக்கு ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்படுகிறது.
இந்திய அளவில் இதுவரை 10 மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறையினருக்குத் தான் இதுவரை இந்த கொடி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சிறப்புக் கொடி
தென் மாநிலங்களைப் பொருத்தவரை இதுவரை எந்த ஒரு மாநிலத்துக்கும் ஜனாதிபதியின் சிறப்புக் கொடி வழங்கப்பட்டதில்லை. இந்நிலையில் தான் தமிழக காவல்துறையினருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது.

முதல் மாநிலம்
தென்மாநிலங்களில் இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம் தமிழகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு, ஜனாதிபதியின் சிறப்பு கவுரவ கொடியை தமிழக போலீசாருக்கு வழகினார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு கவுரவ கொடியை துணை ஜனாதிபதி, முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரம்மாண்ட ஏற்பாடு
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக காவல்துறை சார்பில் பிரம்மாண்டமாக செய்திருந்த நிலையில், பாதுகாப்புக்கு 3 ஆயிரம் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். குடியரசு தலைவரின் கொடி வழங்கல் நிகழ்ச்சிக்கு பிறகு ஓரிரு மாதங்களில் காவல் துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை காவலர்கள் வரை தங்களது சீருடையில் குடியரசு தலைவரின் கொடியை கட்டாயம் அணியும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications