மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக பேராசிரியர் குமார் நியமனம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக பேராசிரியர் குமாரை நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக பேராசிரியர் குமாரை நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 2019ஆம் ஆண்டு எம்.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அங்கு பணிக்காலம் முடியும் முன்னரே அவர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து பல்கலைக் கழகத்தின் நிர்வாக பணிகளை தற்போது ஒருங்கிணைப்பு குழுவினர் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய தற்போது தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த தேடல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி நியமிக்கப்பட்டனர். பேராசிரியர்கள் எம்.ராஜேந்திரன், பி.மருதமுத்து ஆகியோர் தேடல் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த குழு, புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான 3 பேர் கொண்ட பட்டியலை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சமர்ப்பித்தனர். இந்த நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக பேராசிரியர் குமாரை நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் ஆர்.என் ரவி செயல்பட்டுவருகிறார். துணை வேந்தரை நியமிக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கும் சூழலில் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் பேராசிரியராக தற்போது பணியாற்றி வரும் குமாரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமித்துள்ளார்.












Click it and Unblock the Notifications