குடும்பங்களின் பொருளாதார நிலையை அறிய தரவு மேற்கொள்ளப்படும் .. பி.டி.ஆர் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் குடும்பங்களின் பொருளாதார நிலையை அறிய ஒருங்கிணைந்த தரவு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. . நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனையடுத்து, பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 16-ம் தேதி தொடங்குகிறது.

நிதியமைச்சர்
நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பி.டி.ஆர். கூறியுள்ளார். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

தரவு
பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதி அளித்துள்ளார். குடும்பங்களில் பொருளாதார நிலையை அறிய ஒருங்கிணைந்த தரவு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சில நாட்களுக்கு முன்பு பி.டி.ஆர் மாநில நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.

கடன்
அப்போது தமிழ்நாட்டின் நிதிநிலைமை மோசமாக உள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பம் மீதும் ரூ.2 லட்சத்துக்கும் மேற்பட்ட கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் குடும்பங்களின் பொருளாதார நிலை மிகவும் அடியோடு சரிந்துள்ள நிலையில் குடும்பங்களில் பொருளாதார நிலையை அறிய தரவு மேற்கொள்ளப்பட்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

2.05 லட்சம் ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பு
இதேபோல தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தது முதல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை தமிழகத்தில் 2.05 லட்சம் ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றும் நிதி அமைச்சர் பிடிஆர் தெரிவித்தார். தொடர்ந்து பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை நிதி அமைச்சர் வெளியிட்டு வருகிறார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications