நான் பக்கத்து மாநில ஆளுநர்..சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழிசை சவுந்தரராஜன்
கோயிலுக்கு அலை, அலையாக பக்தர்கள் வர வேண்டுமே தவிர கொரோனா அலை வரக்கூடாது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சிதம்பரம்: நான் பக்கத்து மாநிலம் தமிழக அரசாங்கத்தைப் பற்றி கருத்து சொல்லக்கூடாது என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் பேசிய அவர் கோயிலுக்கு அலை, அலையாக பக்தர்கள் வர வேண்டுமே தவிர கொரோனா அலை வரக்கூடாது என பிரார்த்தனை செய்ததாக கூறினார்.
Recommended Video
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதற்கு பொது தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்து விட்டனர். இதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் ஆட்சியர் கூறியுள்ளார். ஆணையருக்கு அறிக்கை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலுங்கானா மாநில ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் புதன்கிழமை இரவு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்தார். அப்போது கோயில் தீட்சிதர்கள் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

தமிழிசை சவுந்தராஜன்
கனகசபையின் மேலே ஏறி நடராஜரை வழிபட்ட ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கோயில் தீட்சிதர்கள் பிரசாதம் வழங்கினர். இதையடுத்து கோயிலை விட்டு வெளியே வந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.

நடராஜர் கோவில்
நடராஜர் கோயிலுக்கு வருகை புரிந்து நடராஜரை தரிசனம் செய்தது மகிழ்ச்சி. அதுவும் நடராஜரை அருகில் நின்று தரிசனம் செய்தது மிக்க மகிழ்ச்சி. நடராஜர் அனைவருக்கும் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். அலை அலையாக பொதுமக்கள் கோயிலுக்கு வர வேண்டுமே தவிர, கொரோனா அலை வரக்கூடாது என பிரார்த்தனை செய்தேன் என்றார்.

பிரதமருக்கு கடிதம்
கோயில் விவகாரம் குறித்து பிரதமருக்கு தீட்சிதர்கள் அனுப்பிய கடிதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழிசை சௌந்தர்ராஜன், இந்திய பிரதமருக்கு யார் வேண்டுமானாலும் கடிதம் அனுப்பலாம். அது அவர்களது உரிமை என்றார்.

பக்கத்து மாநில ஆளுநர்
நடராஜர் கோயில் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிடுவது குறித்தும் ஆய்வு செய்ய வந்தது குறித்தும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், நான் பக்கத்து மாநில ஆளுநர். அதனால் இந்த அரசாங்கம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications