தமிழகத்தில் நவம்பர் 8 வரைக்கும் மழை வெளுத்து வாங்கும் - வெதர்மேன் பிரதீப் ஜான்

வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடையும் என்றும் நவம்பர் 8ஆம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் மழை மனிதர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதிப் ஜான்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் காலை நேரத்திலும் மாலை நேரங்களிலும் உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வடகிழக்குப் பருவமழை இன்று முதல் தீவிரமடையும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. தமிழகம் முழுவதும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. காலை முதல் சென்னை, காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது.

Rain in Tamil Nadu till November 8 - Weatherman Pradeep John

தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி வரைக்கும் பருவமழை தீவிரமடையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இன்று சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், நாகை, திருவாரூர், காரைக்கால், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

தென் தமிழகத்தில் உள் மாவட்டங்களிலும் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்றைய தினம் மேற்கு மாவட்டங்களான திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். நவம்பர் 8ஆம் தேதி வரைக்கும் தேனி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

Rain in Tamil Nadu till November 8 - Weatherman Pradeep John

வடகிழக்குப் பருவமழையை பொறுத்தவரைக்கும் கடலோர மாவட்டங்களில் காலை நேரங்களிலும், உள் மாவட்டங்களில் மாலை நேரங்களிலும் இரவிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+