மட்டன் சிக்கன் எடுத்தாச்சா? இன்னும் 3 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்க போகும் மழை! எங்கெங்கே தெரியுமா?
சென்னை : வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 28 மாவட்டங்களில் அடுத்த 3மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று கனமழையும் 12ஆம் தேதியன்று மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது நேற்று பல மாவட்டங்களில் விடாமல் மழை கொட்டியது. அவ்வப்போது வெயில் தலை காட்டினாலும் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை கொட்டித்தீர்த்தது.

காற்றழுத்த தாழ்வு பகுதி
நேற்று முன் தினம் வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இன்று மழைக்கு வாய்ப்பு
இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சொன்னது போலவே தமிழகத்தின் பல பகுதிகளில் காலை முதலே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

3 மணி நேரத்தில் மழை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மிதமான மழைக்கும், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல், கடலூர், பெரம்பலூர், அசியலூர், மதுரை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

மிதமான மழை
இது மட்டுமல்லாது நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் காலை முதலே பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications