பீட்டர் அல்போன்ஸ் திடீர் கலகக் குரல்- காமராஜர் உள்ளிட்டோர் படங்கள் எங்கே? காங். தலைமை மீது பாய்ச்சல்
காங்கிரஸ் தலைமைகு எதிராக பீட்டர் அல்போன்ஸ் கலகக் குரல் எழுப்பியுள்ளார்.
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ராய்ப்பூர் மாநாட்டு விளம்பரங்களில் காமராஜர் உள்ளிட்ட பல தலைவர்கள் இடம்பெறாதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் முகங்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 3 நாட்கள் மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் 15,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான வியூகம் உள்ளிட்டவை இந்த ராய்ப்பூர் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

ராய்ப்பூரி மாநாட்டில் காங்கிரஸ் செயற்குழுவுக்கான உறுப்பினர்களை நியமிக்க அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, அக்கட்சியின் 45 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு ஒப்புதல் வழங்கியது. காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 23-ல் இருந்து 35 ஆக உயர்த்தப்பட உள்ளது. காங்கிரஸ் கமிட்டியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது குறித்தும் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டின் இறுதி நாளான இன்று ராய்ப்பூரில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் ராய்ப்பூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் எம்.பியும் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் திடீரென காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பீட்டர் அல்போன்ஸ் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ரெய்ப்பூரில் நடக்கும் மாநாட்டிற்கு முழுப்பக்க விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னோடி தலைவர்கள் மவுலானா அபுல் கலாம் ஆசாத், பெருந்தலைவர் காமராஜர்,பாபு ஜெகஜீவன்
ராம் படங்கள் இடம் பெறாதது வருத்தமளிக்கிறது. சுதந்திர போருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் இஸ்லாமிய தலைவர்களின் பங்களிப்பை நாமாவது அங்கீகரிக்க வேண்டும்.பெருந்தலைவர் இரண்டு பிரதமர்களை அடையாளம் கண்டு காங்கிரஸை காத்தவர். அண்ணல் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர். பாபு ஜெகஜீவன் ராம் அப்பழுக்கற்ற காங்கிரஸ்காரர். இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே சோனியா குடும்பத்தின் ஆதிக்கத்துக்கு எதிராக 23 தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். அதில் பல சீனியர் காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸைவிட்டே வெளியேறிவிட்டனர். குலாம் நபி ஆசாத் தனி கட்சியே தொடங்கிவிட்டார். தற்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தலைமைக்கு எதிராக கலக குரலை பீட்டர் அல்போன்ஸ் எழுப்பி உள்ளார்.
-
எழும்பூர்.. திமுகவின் இரும்புக்கோட்டை.. தவெக ராஜ்மோகனுக்கு ‘டெபாசிட்’ கிடைப்பதே சவால்.. ஏன்? -
ரூ.4000 + ரூ.2000.. தவெக விஜய் சட்டென சொன்ன சர்ப்ரைஸ் வாக்குறுதி.. யாருக்கெல்லாம் வழங்கப்படும்? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
காங்கிரஸுக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கும் போல.. கேரளாவில் வினோத பிரச்சனை.. தோல்வி உறுதி? -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications