Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுற்றி வளைத்துப் பேசிய ராஜன்செல்லப்பா! விஷயத்துக்கு வரச் சொல்லிய சபாநாயகர்! சட்டமன்றம் ருசிகரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்றத்தில் சுற்றி வளைத்துப் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவிடம், ஒற்றை வரியில் விஷயத்துக்கு வருமாறு சபாநாயகர் அப்பாவு கண்டிப்பு காட்டினார்.

மதுரை மாநகராட்சியில் விரிவு படுத்தப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் தொடர்பாக கோரிக்கை வைக்க எழுந்த ராஜன் செல்லப்பா, கடந்த அம்மா ஆட்சியில் என்ற வார்த்தையை அடிக்கடி குறிப்பிட்டார்.

இதனிடையே நேரமின்மை காரணத்தை சுட்டிக்காட்டி, விஷயத்துக்கு வாங்க என ராஜன் செல்லப்பாவுக்கு சபாநாயகர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

 சட்டமன்றம்

சட்டமன்றம்

தமிழக சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு பாதாள சாக்கடை திட்டம் தொடர்பாக கோரிக்கை வைத்து பேசினார். அப்போது மதுரை மாநகராட்சியில் விரிவுப்படுத்தப்பட்ட 13 வட்டங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான திட்ட அறிக்கை மட்டுமே இருப்பதாகவும் அதை விரைவில் நிறைவேற்றி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

நேரு பதில்

நேரு பதில்

முன்னதாக கடந்த அம்மா ஆட்சியில் என்ற வார்த்தையை அடிக்கடி குறிப்பிட்டு பேசிய ராஜன் செல்லப்பாவிடம், என்ன கேட்கனுமோ அதை ஒற்றை வரியில் பேசி, விஷயத்து வருமாறு சபாநாயகர் அப்பாவு அட்வைஸ் செய்தார். அதை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்ட ராஜன் செல்லப்பாவும், பாதாள சாக்கடை திட்டம் குறித்த விஷயத்து வந்தார். மேலும், அமைச்சர் நேருவிடம் இருந்து நல்ல அறிவிப்பை மதுரை மக்களுக்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

மீண்டும் திட்டம்

மீண்டும் திட்டம்

ராஜன் செல்லப்பாவுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.என். நேரு, மதுரை மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து பெருநகரங்களிலும் கழிவுநீர் கால்வாய் திட்டம், பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்குமாறு முதலமைச்சர் ஏற்கனவே தன்னிடம் அறிவுறுத்தியிருப்பதாக தெரிவித்தார். மதுரை மாநகராட்சியில் விரிவுப்படுத்தப்பட்டுள்ள 13 வட்டங்களிலும் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவதற்கு மீண்டும் ஒரு திட்டம் வகுக்கப்படும் என்றும் ஏற்கனவே நடைபெற்று வரும் பணிகள் நீட்டிக்கப்படும் எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

Recommended Video

    இன்றைய சட்டமன்றம் : OPS கேள்வியும் அதற்கு எ.வ.வேலு கொடுத்த பதிலும்
     தொகுதி எம்.எல்.ஏ.

    தொகுதி எம்.எல்.ஏ.

    ஹார்விபட்டி, திருநகர், சின்ன அனுப்பனடி, ஐராவதநல்லூர் உள்ளிட்ட 13 வார்டுகள் திருப்பரங்குன்றம் தொகுதியிலிருந்து மதுரை மாநகராட்சி எல்லைக்குள் வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் தொகுதியின் எம்.எல்.ஏ. என்ற முறையில் இக்கேள்வியை சட்டமன்றத்தில் எழுப்பியிருக்கிறார் ராஜன் செல்லப்பா.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+