"ஏன் இப்படி போஸ்டர் அடிக்கறீங்க.. எல்லாத்தையும் நிறுத்துங்க".. ரஜினி மன்றத்தினருக்கு திடீர் உத்தரவு
சென்னை: "ஏன் இப்படி போஸ்டர் அடிக்கறீங்க? தலைமையிடம் இருந்து உத்தரவு வரும்வரை யாரும் போஸ்டர் அடிச்சு ஒட்டாதீங்க" என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.. இது ஒரு வாய்மொழி உத்தரவு என்றும் சொல்லப்படுகிறது.
2 தினங்களாக ஒரு செய்தி பரபரத்து காணப்பட்டது.. எல்லா கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகிவிட்ட நிலையில், இன்னும் தலைவர் ரஜினிகாந்த் மட்டும் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளாரே என்ற ஆதங்கம் மன்றத்து நிர்வாகிகளுக்கு எழுந்தது.
இதனால் ஆங்காங்கே 'இப்போ இல்லேன்னா எப்பவுமே இல்லை" என்று போஸ்டர்களை அடித்தும் ஒட்டினார்கள். வேலூர், மதுரை, இராமநாதபுரம் கோவை உள்ளிட்ட நிர்வாகிகள் தரப்பில்தான் இப்படி போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டப்பட்டது.

இந்நிலையில், "தேர்தலுக்கு இன்னும் 6 மாசம்தான் இருக்கு.. இப்போதுகூட, அரசியல் முடிவை தெளிவாக அறிவிக்கமாட்டேன் என்கிறார் தலைவர்.. இப்போது அவரை மன்றத்தினருக்கு வரவில்லை. இப்போ அதிமுக, திமுக உட்பட எல்லா கட்சிகளும் தேர்தல் வேலையில் இறங்கிவிட்டன.. ஆனால், தலைவர் கட்சி பற்றியே பேசமாட்டேன் என்கிறார்... இதெல்லாம் எங்களுக்கு வருத்தமாக உள்ளது... கூடிய சீக்கிரம் அவர் ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்" என்று ஆதங்க கோரிக்கை விடுத்தவாறே இருந்தனர். இதனால் ரஜினி தரப்பு கடுமையாக அப்செட் ஆனதாக தெரிகிறது.
இந்நிலையில், மன்றத்து நிர்வாகிகளுக்கு ஒரு உத்தரவு வந்துள்ளாம்.. அதாவது தலைமையிடம் இருந்து உத்தரவு வரும் வரை போஸ்டர்கள் அடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். மேலும் தலைமை உத்தரவு இல்லாமல் தன்னிச்சையாகவும் செயல்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாம்.. இந்த உத்தரவை ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு அதன் தலைமை நிர்வாகி சுதாகர் வாய்மொழி உத்தரவாக பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications