தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு!
சென்னை: தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலுக்கு 6 பேர் போட்டியிட்டிருந்தனர். இந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த தேர்தலில் திமுக 4 இடங்களில் வெற்றிப்பெறும் அளவுக்கு பலம் கொண்டிருந்தது. அதேபோல அதிமுக 2 இடங்களில் வெற்றிப்பெறும் அளவுக்கு பலம் வைத்திருந்தது. இந்நிலையில் திமுக 2 தொகுதிகளையும், அதிமுக 1 தொகுதியையும் கூட்டணிக்கு கொடுத்தது.

அந்த வகையில் திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் போட்டியிருந்தனர். தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் போட்டியிட்டிருந்தனர்.
மறுபுறம், அதிமுக சார்பில் தம்பிதுரை, பாமகவின் அன்புமணி ராமதாஸ் என மொத்தம் 6 பேர் களமிறங்கியிருந்தனர். இந்நிலையில் இந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications