பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் இரும்பு, சிமெண்ட் விலையும் உயர்வு! வீதிக்கு வந்த கட்டுமான அமைப்பினர்
சென்னை: இரும்பு மற்றும் சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான தொழில் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், பதிவு கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் போன்றவற்றின் கட்டணங்களை குறைக்க கோரியும் கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் செயலாளர் யுவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இரும்பு சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், கட்டுமான பொருட்களுக்கு விலை நிர்ணயக் குழு அமைக்க வேண்டும் எனவும், அங்கீகாரமற்ற மனைகளை வரைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவர் பொன்குமார்: கட்டுமானம் முழுவீச்சில் நடைபெறாத போது எப்படி விலை உயரும் என கேள்வி எழுப்பினார். இரும்பு மற்றும் சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான தொழில் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் மத்திய மாநில அரசு உடனடியாக தலையிட்டு விலை உயர்வை குறைக்க வேண்டும் என்றார்.
மத்திய பட்ஜெட்டில் இதுபற்றி எந்த அறிவிப்பும் இல்லை, டீசல் பெட்ரோல் விலை உயர்வால் கட்டுமான பொருட்கள் விலை இயற்கையாக விலை உயர்கிறது. அரசு தனி கவனம் செலுத்தி விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications